ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
    இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
    இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
    றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.
  • 10. ஆயும் சிவாய நமமசி வாயந
    ஆயும் நமசி வயய நமசிவா
    ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
    ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.
  • 11. அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
    அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
    அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
    அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.
  • 12. அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
    அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
    அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
    அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.
  • 13. சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
    சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
    சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
    தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.
  • 14. அதுவாம் அகார இகார உகாரம்
    அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
    அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
    பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.
  • 15. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
    சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
    நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
    ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.
  • 16. இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
    செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
    புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
    முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.
  • 17. ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
    ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
    சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
    கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
  • 18. அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
    பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
    எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
    புண்ணிய வாளர் பொருளறி வார்களே.
  • 19. அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
    இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
    மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
    தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
  • 2. தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
    தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
    தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
    தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.
  • 20. அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
    கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
    கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
    சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.
  • 21. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
    அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
    அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
    அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.
  • 22. கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
    கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
    கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
    கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
  • 23. அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
    அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
    அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
    அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
  • 24. தானே அளித்திடும் தையலை நோக்கினால்
    தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
    தானே அளித்த மகாரத்தை ஓதினால்
    தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.
  • 25. கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
    கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
    கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
    கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.
  • 26. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
    தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
    தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
    தானே எழுந்த மறையவ னாமே.
  • 27. மறையவன் ஆக மதித்த பிறவி
    மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
    மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
    மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.
  • 28. ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
    ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
    ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
    ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.
  • 29. அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
    செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
    ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
    பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.
  • 3. அரகர என்ன அரியதொன் றில்லை
    அரகர என்ன அறிகிலர் மாந்தர்
    அரகர என்ன அமரரும் ஆவர்
    அரகர என்ன அறும்பிறப் பன்றே.
  • 30. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
    வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
    துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
    உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.
  • 31. ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
    நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
    ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
    மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.
  • 32. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
    பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
    ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
    பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.
  • 33. பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
    பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
    பரமா யசியநம வாபரத் தோதில்
    பரமாய வாசி மயநவாய் நின்றதே.
  • 34. நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
    நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
    நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
    நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.
  • 35. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
    மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
    கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
    குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.
  • 36. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
    கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
    கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
    கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
  • 37. வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
    சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
    நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
    தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.
  • 38. அகார உகார சிகாரம் நடுவா
    வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
    சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
    ஒகார முதல்வன் உவந்துநின் றானே.
  • 39. அற்ற இடத்தே அகாரம தாவது
    உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
    செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
    குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.
  • 4. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
    எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
    ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
    பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
  • 40. அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
    உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
    மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
    எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
  • 41. நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
    வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
    யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
    ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.
  • 42. காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
    மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
    மேலை நடுவுற வேதம் விளம்பிய
    மூலன் நடுவுற முத்திதந் தானே.
  • 43. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
    பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
    ஓவிய ராலும் அறியஒண் ணாதது
    தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.
  • 44. அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
    அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
    அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
    அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.
  • 45. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
    உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
    சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
    அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.
  • 46. சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
    ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
    பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
    ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.
  • 47. அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
    பெருகு துடியிடை பேணிய விந்து
    மருவி யகார சிகாரம் நடுவாய்
    உருவிட ஆறும் உறுமந் திரமே.
  • 48. விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
    சந்திர னோடே தலைப்படு மாயிடின்
    அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
    அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.
  • 49. ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
    ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
    வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
    ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.
  • 5. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
    ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
    விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
    கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.
  • 50. ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
    ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
    சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
    நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.
  • 51.  விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
    பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
    கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
    அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.
  • 52. ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
    ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
    ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
    ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.
  • 53. அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
    அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
    அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
    அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.
  • 54. வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
    சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
    சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
    போந்திடும் என்னும் புரிசடை யோனே.
  • 55. உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
    பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
    விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
    எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.
  • 56. ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
    ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
    ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
    ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.
  • 57. வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
    நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
    சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
    தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.
  • 58. நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
    நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
    நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
    நாலாம் எழுத்தது நன்னெறி தானே.
  • 59. இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
    நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
    பயந்தனை ஓரும் பதமது பற்றும்
    பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.
  • 6. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
    ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
    ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
    ஆலய மாக அமர்ந்திருந் தானே.
  • 60. ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
    ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
    நாம நமசிவ என்றிருப் பாருக்கு
    நேமத் தலைவி நிலவிநின் றாளே.
  • 61. பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின்
    இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர
    நட்டம தாடும் நடுவே நிலயங்கொண்
    டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.
  • 62. அகாரம் உயிரே உகாரம் பரமே
    மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
    சிகாரம் சிவமா வகாரம் வடிவா
    யகாரம் உயிரென் றறையலும் ஆமே.
  • 63. நகார மகார சிகாரம் நடுவா
    வகாரம் இரண்டு வளியுடன் கூடி
    ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
    மகார முதல்வன் மனத்தகத் தானே.
  • 64. அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
    அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
    அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
    அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.
  • 65. ஐந்து கலையில் அகராதி தன்னிலே
    வந்த நகராதி மாற்றி மகாராதி
    நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
    சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.
  • 66. மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
    அருமந்த யோகமும் ஞானமு மாகும்
    தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
    அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.
  • 67. அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
    நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
    வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
    தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.
  • 68. சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
    சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்
    சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்
    சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.
  • 69. சிகார வகார யகார முடனே
    நகார மகார நடுவுற நாடி
    ஒகார முடனே ஒருகால் உரைக்க
    மகார முதல்வன் மதித்துநின் றானே.
  • 7. இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
    இருந்த அதனுள் இரேகைஐந் தாக
    இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
    இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
  • 70. நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
    அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
    சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
    தம்முத லாகும் சதாசிவன் றானே.
  • 71. நவமும் சிவமும் உயிர்பர மாகும்
    தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
    சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
    சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.
  • 72. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
    நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
    ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
    தேடி யதனைத் தெளிந்தறி யீரே.
  • 73. எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
    எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
    எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
    பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
  • 74. எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
    யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
    வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
    சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
  • 75. தானவர் சிட்டர் சதுரர் இருவர்
    ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
    ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
    சேனையும் செய்சிவ சக்கரந் தானே.
  • 76. பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
    விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
    எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
    ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
  • 77. சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
    அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
    அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
    சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.
  • 78. வித்தாஞ் செகமய மாக வரைகீறி
    நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
    உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்
    பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.
  • 79. கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
    கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
    பண்பழி யாத பதிவழி யேசென்று
    நண்பழி யாமே நமஎன லாமே.
  • 8. மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
    ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
    யகாரம் தலையா இருகண் சிகாரமா
    நகார அகாரம்நற் காலது வாமே.
  • 80. புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
    றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
    நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
    கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.
  • 81. ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
    ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
    சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
    பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
  • 82. எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
    கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
    சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே
    ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.
  • 83. நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
    அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
    உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
    உம்முத லாயவன் உற்றுநின் றானே.
  • 84. நின்ற அரசம் பலகைமேல் நேராக
    ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
    துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
    தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.
  • 85. கரண இறலிப் பலகை யமன்திசை
    மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு
    அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில்
    முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.
  • 86. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
    பாங்கு படவே பலாசப் பலகையில்
    காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
    டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.
  • 87. உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
    பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
    முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
    வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.
  • 88. ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
    ஏய்ந்த அகார உகார எழுத்திட்டு
    வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
    கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.
  • 89. எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
    டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
    வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
    கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.
  • 9. நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
    ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
    நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
    வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.