ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

English Meaning:
Lord Revealed His First Letter ``Si``

The North beamed in radiant light
There stood Lord of Devas (Indra) crowned in diadem bright;
And the Lord revealed His letter ``Si``
Sparkling as rays within gem pure,
It beamed aloft for all to see
Unto a light set on mountain top.
Tamil Meaning:
வெள்ளியேயானும் மாணிக்கத்தைப் போலச் சிறப் புற்று நிற்கின்ற, வடதிசைக்கண் உள்ள மலை ஆகிய கயிலாயத்தின் கண் தழல்போன்ற உருவினையுடையவனாய் உள்ள சிவபெரு மான், திருவைந்தெழுத்தில் மாணிக்கம் போலச் சிறந்து நிற்பதாகிய சிகாரத் தையே தானாக உணரும்படி, மாணிக்கமாகக் காட்டி நிற்கின்றான்.
Special Remark:
இந்திரன் - தலைவன். பிறதலைவரினின்றும் பிரித்தற்கு ``நல்லிந்திரன்`` என்றார். இனி, `இந்தீரன்` என்பது குறுகியது எனக் கொண்டு, `சந்திரனை அணிந்து காத்த அருளுடையவன்` என உரைத்த லுமாம். ``மாணிக்கமாகக் காட்டிநின்றான்`` என்றதனால், `அதனின் மிக்கது பிறிதில்லை` என்பது பெறப்பட்டது. படவே, `அதனால் சிவானந்த விளைவு உண்டாகும்` என்றவாறாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``ஒளி`` ஆகுபெயர். ஏனைய அடிகளில், `ஒளிக்கல்` என்பது பின் முன்னாக நின்றது.
இதனால், சிகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.