ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.

English Meaning:
How to Chant Mula Chakra

As you describe Chakra of this mantra (Om)
The Lord as Guru will instruct you
The Way to meditate on it, clear;
Anterior to chanting this mantra
Were the seed-mantras that pertains
To Wind, Water, Fire, Earth and Sky
Yam, Vam, Ram, Lam, and Ham.
Tamil Meaning:
மேற்சொல்லிய சக்கரத்தில் உள்ள மந்திரங்கள் பொறிக்கப்படும் வழியையும், பொறித்து வழிபட வேண்டிய முறை களையும் அறிந்தால் அவ்வாறு அறிபவர்கட்கு இறைவன் அவர்களது உணர்வு தெளிவுபெறும்படி செய்வான். இனி, அம்மந்திரங்களில் ஒவ் வொன்றும் நிலம் முதலிய மா பூதங்களை வழிபடுவதற்கு அமைந்த வித்துக்களில் (பீசாக்கரங்களில்) ஒவ்வொன்றின் முன்னதாயிருக்கும். அதுவும் அவை எய்தும் வழிகளில் ஒன்றாகும்.
Special Remark:
இதனுட் சிறப்பாகச் சொல்லியது, நிலம் முதலிய பூதங்கட்கு உரிய `ஹ்லாம், ஹ்வீம், ஹ்ரீம், ஹ்யைம், ஹ:` என்னும் வித்தெழுத்துக்கள் மேற்கூறிய சக்கரத்திலுள்ள `ஹம்ஸ:, ஹரி, ஹர, ஹ்ரீம், ‹ிவ` என்னும் மந்திரங்கட்கு முன்னே சேர்த்துச் சொல்லப் படும் என்பது. `இவ் வித்தெழுத்துக்கள் இம்முறையே நிவிர்த்தி முதலிய கலைகட்கும் உரியன. என்பது` சிவஞான சித்தியாரிலும் (சூ. 2 - 67, 68) சொல்லப்பட்டது. `இது பற்றியேமேலைச் சக்கரத்தில் சூலங் கட்கு இடையே அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும் பொறிக்கப் பட்டன` என்பது கருத்து.
நிலம் முதலிய பூதங்களைச் செய்யுள்பற்றி முறை பிறழக் கூறினார். முயலுதல் - வழிபடுதல். இங்கு ``முன்`` என்றதை எழுத்திலக்கணத்துள் புணர்ச்சி விதிகளில் `முன்` என்பது போல இடமுன்னாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்திற்கு எய்தியதன்மேல் மற்றொரு செய்தி கூறப்பட்டது.