
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.
English Meaning:
I Chanted Nama and Lord AppearedAnd Lo! within the lotus of my heart,
I beheld Him
And as I saw Him, I rose and met Him;
I then lost my sense of Self,
Betaking to gracious way of Lord Eternal;
In endearment undiminished,
Do chant ``Nama.
Tamil Meaning:
யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம்.Special Remark:
`அதனால், நீவிரும் இவ்வாறு அப்பேற்றினைப் பெறு மின்` என்பது குறிப்பெச்சம். பதி, ஆகுபெயர். ``நம`` என்றது, `நம சிவாய` என்பதை முதற் குறிப்பாற் கூறியவாறு. இங்குக் கூறிய பஞ் சாட்சரம் அதன் பேதங்கள் அனைத்தையும் கொள்ள நின்றது.இதனால், மேற்கூறிய திரிமண்டலச் சக்கரம் அதற்கு முன்னர்க் கூறப்பட்ட சிவசக்கரத்திற் செலுத்துவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage