
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.
English Meaning:
Chant Om and Rouse KundaliniKindle the Fire (Kundalini) where it dormant lies
Chant letter `na` that is in the chakra
Then the symbolized `na`
Brings the Lord there.
Tamil Meaning:
மேற்காட்டிய சக்கரங்களில் யாதானும் ஒன்றில் உணர்வை நிறுத்திப் பிராணாயாமத்தால் மூலாதாரத்தில் உள்ள அனலை ஓங்கி எழச் செய்து, சக்கரத்தில் உள்ள எழுத்துக்களில் நகாரத்தைச் செபித்தால், அச்சக்கரத்தில் மறைந்து நிற்கும் கூத்தப் பெருமானை அந்த நகாரத்திற்கு உரியவளாகிய திரோதன சக்தி அச்சக்கரத்திலே பொருந்தச் செய்வாள்.Special Remark:
திசை - பகுக்கப்பட்ட இடம். உறுதல் இங்கே உலகப் பயனைப் பெற்று மகிழ்தலாம். ஆகவே ``நின்ற``, என்பதும், போகியாய் நின்றதனையாதல் அறிக. `ஆக்கினன்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தான், திரோதான சக்தி.இதுமுதல் நான்கு மந்திரங்களால், மேலை மந்திரத்துள் ஓதியவாறு ஒவ்வோர் எழுத்தே பயனளித்தலை வகுத்தோதப் புகுந்து, இதனால் நகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage