ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.

English Meaning:
The Yantra of Six Letters Om Na Ma Si Va Ya

Inscribe Letter `Ma` in centre
Above it describe Letter `Va`
Surround the two by Letter `O`
Split them in Centre vertically by letter U
Place Letter `Ya` on top,
Fix letter `Si` on both sides,
That they look like eyes two,
The Letters `Na` and `Va` to form the diagram`s feet two.
Tamil Meaning:
மேற்சொல்லியவாறு நடுவே பொறிக்கப்பட்ட மகாரத்தைச் சூழ வகாரத்தைப் பொறியுங்கள்; பின்பு அவ்விரண் டையும் ஒகாரத்தால் வளைத்து, அவ் ஒகாரத்துள் உகாரத்தைத் தொடங்கி அடுத்த அறைகள் இரண்டிரண்டாகும்படி பிளந்து ஏறக் கீறிப் புறவட்டத்தில் இருபக்கத்து அறைகளைத் தலைகளாகவும், மற்றைய இருபக்கத்து அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு, தலைகளாகின்ற அறைகளில் யகாரத்தையும், கால்களாகின்ற அறைகளில் ஒன்றில் நகாரத்தையும், மற்றொன்றில் அகாரத்தையும் பொறித்து வழிபடுதலையும், செபித்தலையும் செய்யுங்கள்.
Special Remark:
இதன் வடிவத்தைக் கீழே காண்க.
இதனால், உருவாகும் மந்திரங்கள், `அ உ ம வ சி ய` என்பதும், ` ந ம உ வ சி ய` என்பதும் ஆகும். இரண்டற்கும் முன்னே `ஓ` கொள்ளப்படும். அகாரம் முதலாகவும், நகாரம் முதலாகவும் தொடங்கும்பொழுது உள் வட்டத்திலிருந்தே தொடங்கிப் பலமுக மாகவும் செல்ல ஓதுதல் கூடுமாற்றை அறிந்து கொள்க. விளிம்பு வட்ட தலைக்குப் பக்கங்களில் உள்ள அறைகள் நடனத்தில் இறை வனது தலைசெல்லும் பக்கங்களாகவும், கால்களுக்கு நேரே உள்ள ஓர் அறை, நிற்கும் நிலை இட மாகவும், அவற்றின் பக்கத்தில் ஒற் றித்தும் இரட்டித்தும் உள்ள இடங்கள் நடனத்தில் தலை, கை, கால்கள் பெயர்ந்து செல்லும் இடங்களாகவும் கருதிக்கொள்க. இங்ஙனமெல்லாம் கருதிக்கொள்ளுதற்காகவே` தலை, கண், கால்` என உருவகித்து ஓதினார். சமட்டி, வியட்டிப் பிரணவங் களோடு தூல பஞ்சாக்கரம் அமைந்திருத்தலால், இது தூலத் திருவம்பலச் சக்கரம் ஆதல் அறியப்படும்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.