
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.
English Meaning:
Umapathi ChakraDraw lines eight vertical
And lines eight horizontal;
In chambers thus formed
Distribute letters that each occurs times eight
Repeat it in corners four
Encircle the whole in Om
Meditate thus on the Chakra
The Lord of Uma will thine be.
Tamil Meaning:
மேற்கூறிய சக்கரத்தின்படியே சமட்டிப் பிரண வத்தை முன்வைத்து வியட்டிப் பிரணவத்தைச் செபிக்குங்கால் இடையே நகார முதலும் யகார ஈறுமான தூல பஞ்சாக்கரத்தை ஓதுதலையும் முறையாகக் கொண்டு, `இச்செபம் உகாரத்தை முதலிற் கொண்ட மந்திரத்திற்குரிய உமாதேவியின் தலைவனாகிய சிவனுக்கு உரியது` என்பதனை ஐயம் அறத் தெளிந்து செபிப்பவர் சென்னிமேல் அந்த உமாபதியாகிய சிவன் எழுந்தருளியிருப்பன்.Special Remark:
``நம்முதல் அவ்வொடு`` என்றதில், `அ` என்றது, யகரத்தையே, `யவ்வொடு` என்றே பாடம் ஓதினுமாம். ``அவ்வொடு`` என்றது அகர ஈற்றோடு என்றவாறு. அவ்வொடு என்றதன் பின் `பொருந்திய` என்பது எஞ்சி நின்றது. `நம்முதலொடும் அவ்வீற் றொடும் பொருந்திய நாவினர் ஆகி` என்க. ``எட்டு`` என்றது, எட்டு முகமாகவும் செபிக்கப்படும் எட்டு உருக்களை. `நாவினராகியே எட்டிடை உற்று` என்ற தனால், வியட்டிப் பிரணவத்திற்கு முன்னே தூல பஞ்சாக்கரத்தை வைத்து ஓதுதல் பெறப்பட்டது. உகாரம் முதலாகிய மந்திரம், `உம` என்பது,இதனால், மேற்கூறிய சக்கரத்திற்கு, முன்னர்க் கூறிய முறைகளின்மேல் மற்றொரு முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage