ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

English Meaning:
Sivayanama

Inscribe Letters Five Si Va Ya Na Ma;
In the next row place Letters Ya Na Va Si Ma;
Further on place the letters in order thus;
Ma Va Ya Na Si; Si Ya Na Ma Va;
And Va Si Ma Ya Na
Thus do the Five Letters in Chakra permuted stand.
Tamil Meaning:
திருவைந்தெழுத்து மேற்கூறியவாறு ஐம்பத் தோரெழுத்துக்களின் இடை நிற்குங்கால் நெடுக்காயினும் குறுக் காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.
Special Remark:
அஃது ஆமாறு:-
இதனால், நடுவரிசையை இடமிருந்து வலமாகவும், கீழிருந்து மேலாகவும் ஓதத் திருவைந்தெழுத்து நகாரம் முதலாக அமைதலும், சிகாரங்கள் முக்கோணக் கூட்டிரேகையில் முழுதும் நின்று சிகாரம் முதலாக ஏற்ற பெற்றியால் ஓதிக் கொள்ளுமாறு அமைதலும் காண்க. மேற்கூறிய சக்கரத்தில் வடமொழி எழுத்துக்களோடு இவற்றை எழுது வதாயின் இரண்டெழுத்திற்கும் இடைநிற்கவும், தமிழ் எழுத்துக் களோடு எழுதுவதாயின் அவ் எழுத்திற்கு மேல் நிற்கவும் எழுதுதல் வேண்டும் என்க. `மிகவும் உள்ளிடம்` என்பார் ``உள்நடு`` என்றார்.
பரம் - மேன்மை, மேல். நடுவரிசை தொடங்கி மேன்மேற் செல்லுங்கால் அடிவரிசைக்குத் திரும்பிப் பின் நடுவரிசையை அணுக வருதல் அறிக. வகார ஆகாரத்தைச் செய்யுள் நோக்கிச் சில இடங்களில் வகரமாக ஓதினார்.
இதனால், மேற்கூறிய பேரம்பலச் சக்கரத்திற்கு மேலை மந்திரத்திற் கூறிய ஒரு சிறப்பு முறை விளக்கிக் கூறப்பட்டது.