
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.
English Meaning:
The Five Letters Can Control the Five SensesFive the elephants (senses)
In the body-forest roam,
The Five Letters become the goads
For the five elephants,
Only they who can contain
The five (senses) together,
Can, unafraid, reach Primal Lord.
Tamil Meaning:
ஒரு காட்டில் வாழ்வனவாகிய ஓர் ஐந்து யானைகள் உள்ளன. அவைகளை அடக்குதற்குச் சிவ நாமத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே அங்குசங்களாய் உதவும். அந்த அங்குசத்தைக் கொண்டு அவைகளை முழுதும் அடக்கவல்லவர்கட்கே ஐந்து பூதம் முதலிய தத்துவங்கட்கு முதல்வனும், முதற்கடவுளுமாகிய சிவனது இடத்தில் புகுதல் கூடும்.Special Remark:
``அஞ்சு ஆனை`` என்றதும் `அடவி` என்றதும், `தாம் குறித்த அவை` என்னும் பொருளவாய் நின்றன. அவை ஐம்பொறி களும், தத்துவதாத்துவிகக் கூட்டங்களுமாம். ``அஞ்சுக்கும் அஞ்செழுத்து`` என்றது நயம் தோற்றி நின்றது. நகாரம் முதலியவற்றை மூக்கு, நாக்கு, கண், மெய், செவி என்பவற்றோடு முறையே இயைத்துக் காட்ட முயல்வாரும் உளர். கூட - ஒருசேர, `அஞ்சாதி யாகிய ஆதி` என்க. அகம் திருவடி நிழல்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage