ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. காயம் பலகை கவறைந்து கண்மூன்று
    ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
    ஏய பெருமான் இருந்து பொருகின்ற
    மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
  • 10. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
    ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
    காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
    மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.
  • 11. தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
    மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
    வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
    தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.
  • 12. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
    திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
    வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
    விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
  • 13. இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
    கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
    மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
    அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
  • 14. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
    விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
    விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
    விளைந்து கிடந்தது மேவுக் காதமே.
  • 15. களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
    களர்உழு வார்கள் கருதலும் இல்லை
    களர்உழு வார்கள் களரின் முளைத்த
    வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
  • 16. களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
    களர்உழு வார்கள் கருதலும் இல்லை
    களர்உழு வார்கள் களரின் முளைத்த
    வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
  • 17. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
    குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
    உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
    முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
  • 18. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
    மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
    மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
    பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
  • 19. ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
    தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
    தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
    மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.
  • 2. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
    மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
    மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
    ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.
  • 20. எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
    தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
    மலராத பூவின் மணத்தின் மதுவைப்
    பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.
  • 21. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
    கூகின்ற நாவலின் தருங்கனி
    ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
    வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.
  • 22. மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
    வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
    பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
    வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
  • 23. பத்துப் பரும்புலி யானை பதினைந்து
    வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
    அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
    அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.
  • 24. இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
    இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
    இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
    இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.
  • 25. ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
    பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
    முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
    நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.
  • 26. கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
    நாகையும் பூழும் நடுவில் உறைவன
    நாகையைக் கூகை நணுக லுறுதலும்
    கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
  • 27. குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
    நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
    உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
    புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
  • 28. காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
    கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
    மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
    மூடு புகாவிடின் மூவணை யாமே.
  • 29. கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
    காறையும் நாணும் வளையலும் கண்டவர்
    பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
    ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.
  • 3. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
    சாறு படுவன நான்கு பனைஉள
    ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
    ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.
  • 30. துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
    விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
    வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
    ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.
  • 31. பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
    திருந்திய மாதர் திருமணப் பட்டார்
    பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
    இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
  • 32. கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
    ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
    சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
    பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.
  • 33. இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
    தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
    குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
    தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
  • 34. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
    நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
    மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
    தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.
  • 35. கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
    காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
    காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
    கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.
  • 36. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
    எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
    கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
    எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.
  • 37. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
    குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
    கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
    பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.
  • 38. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
    குட்டத்து நீரில் குவளை எழுந்தது
    விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
    குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.
  • 39. ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
    நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
    ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
    மாறுத லின்றி மனைபுக லாமே.
  • 4. வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
    புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
    தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
    முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
  • 40. கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
    வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
    கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
    ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.
  • 41. கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
    கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
    கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
    இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
  • 42. கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
    முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
    பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
    மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.
  • 43. கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
    ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
    நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
    பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.
  • 44. கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
    எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
    எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
    ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.
  • 45. உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
    எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
    தழுவி வினைசென்று தான்பய வாது
    வழுவாது போவன் வளர்சடை யானே.
  • 46. பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
    ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
    அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
    பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
  • 47. தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
    வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
    நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
    ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.
  • 48. முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
    செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
    பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
    நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.
  • 49. அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
    முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
    கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
    மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.
  • 5. ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
    செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
    மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
    பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.
  • 50. பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
    தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
    குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
    குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
  • 51. மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
    கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
    பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
    கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.
  • 52. நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
    யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
    கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
    தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.
  • 53. கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
    மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
    நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
    பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.
  • 54. வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
    வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
    வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
    வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.
  • 55. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
    புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
    விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
    அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
  • 56. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
    விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
    களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
    அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.
  • 57. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
    படைகண்டு மீண்டது பாதி வழியில்
    உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
    அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
  • 58. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
    ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
    நாகமும் எட்டொடு நாலு புரவியும்
    பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.
  • 59. பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
    கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
    தூசி மறவன் துணைவழி எய்திடப்
    பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.
  • 6. பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
    கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
    உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
    வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.
  • 60. கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
    கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
    வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
    வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.
  • 61. வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
    தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
    வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
    காணியும் அங்கே கலக்கின்ற வாறே.
  • 62. கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
    அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
    திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
    தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.
  • 63. போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
    தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
    ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
    மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.
  • 64. கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
    காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
    வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
    யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.
  • 65. தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
    நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
    மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
    காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.
  • 66. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
    புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
    புலம்பி னவளோடும் போகம் நுகரும்
    புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.
  • 67. தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
    ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
    வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
    ஆணி கலங்கின் அதுஇது ஆமே.
  • 7. மூவணை ஏரும் உழுவது முக்காணி
    தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
    நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
    காலணை கோலிக் களர்உழு வார்களே.
  • 8. ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
    மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
    பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
    கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
  • 9. பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
    குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
    குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
    பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.