ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

English Meaning:
Iruvinai Oppu Leads to Siva

The Plantain Tree and the Surai Creeper (pepper) together covered space;
The Surai creeper is stronger by far than the Plantain tree they say;
Cutting down the Plantain tree and Surai creeper, together,
The Plantain extending flourishes sure.
Tamil Meaning:
ஒருவன் வாழும் இல்லத்தில் வாழைச் செடியும், முள் மிகுந்த பிரப்பங் கொடியும் வளர்ந்து, அதில் உள்ள இடம் முழுவதையும் கவர்ந்து கொண்டன, இந்நிலையில், அதில் வாழவேண்டிய தலைவன் எவ்வாறு வாழ்வது?
வாழையை அழிப்பதைவிடப் பிரப்பங்கொடியை வேரோடு அறுத்தெறிவது `கடினம்; கடினம்` என்கின்றார்கள். இருப்பினும் வாழை நல்லது போலத் தோன்றினாலும் வாழ இடம் இல்லாமல் செய்வதால் அதையும், பிரப்பங் கொடியையும் ஒருங்கே அறுத்தெறிந்துதான் வாழ வேண்டும்.
Special Remark:
வாழை, இன்பம். சூரை - துன்பம் இவவைகளால் கவர்ந்து கொள்ளப்பட்ட இடம் புத்தி தத்துவம்.
ஈற்றடியில் உள்ள ``வாழை`` என்பதை, `வாழ்+ஐ` எனப்பிரித்து, `வாழ வேண்டிய தலைவன்` என உரைக்க.
தலைவன், ஆன்மா. வாழ்தல், பசுகரணத்தைச் சிவகரணம் ஆக்கிச் சிவானந்தம் எய்துதல். `வாழ்கின்றவாறு, வன்துண்டம் செய்திட்டு` என மாறிக்கூட்டி முடிக்க. இரண்டையும் துண்டம் செய்தலாவது, அவற்றில் அழுந்தாது விடுதல்.
அடுக்கு, வலியுறுத்தற் பொருட்டு, `இன்பத்தில் அழுந்தாமல் இருத்தல் கூடும்; துன்பத்தில் அழுந்தாமல் இருப்பது அரிது` என்பதை, ``வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்`` என்றார்.
இதனால், ``ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்`` இருவினையொப்பு வந்தாலன்றிச் சிவானந்த வாழ்வு வாழ இயலாது` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.