
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
English Meaning:
Jiva Vanquishes Indriyas by YogaThe Tiger1 that leaps twelve2 leagues crouches,
The Billows3 of the Hidden Sea soft spreads,
The nectar-sweet rapturous ambrosia wells up,
Thus did Jiva surround the Five4 that harassed.
Tamil Meaning:
காட்டிலே வாழ்கின்ற ஒருவன் அங்குள்ள ஒரு புலிக்கு அஞ்சி எங்கே பதுங்கியிருந்தாலும் அந்தப் புலி பன்னிரண்டு காதம் வரையிலும் பாய்கின்றது. அதனால் அவன் அந்தக் காட்டை விட்டு ஒரு கடற்கரையை அடைந்தான். அங்கே புலிப் பாய்ச்சல் இன்றிக் குளிர்ச்சியான அலைகள் அழகாக வந்து வந்து சென்றன. பின் அவன் பெற ஒட்டாமல் ஐவர் வந்து கூர்மையான கருவியாற் குற்றினர். ஆயினும் அவன் அவர்களை வளைத்துக் கொண்டு அடித்துத் துரத்தினான். (பின்பு அவன் அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ!.)Special Remark:
காடு, தூல உடம்பு. அதில் உள்ள பிராண வாயு பன்னிரண்டங்குலம் வெளியேறி வாழ்நாளைச் சிறிது சிறிதாக உண்டு வருதலால் அதனைப் பன்னிரண்டு காதம் பாய்ந்து தாக்கும் புலியாகக் கூறினார். `பன்னிரு காதம் பாயும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.உடம்பையே உடம்பாகக்கொண்டு செயற்படுதலை விடுத்து, அருளையே உடம்பாகக் கொள்ளுதலைக் கடற்கரையை அடைந்ததாகக் கூறினார். கடற்கரை இனிய இடமாதல் தெளிவு. அருளை உடம்பாகக் கொண்டோர்க்கு நிகழ்வன யாவும் அருட் செயலாகத் தோன்றுதலைக் கடல் அலைகள் வந்து உலவுவதாகக் கூறினார்.
அமிர்தம், சிவானந்தம். அதனைப் பற்ற ஒட்டாமல் வந்து தாக்கும் ஐவர் ஐம்பொறிகள். அருள்வழி நிற்பார்க்கு ஐம்பொறிகளை வெல்லும் எளிதாதல்பற்றி, ``ஐவரைப் போய் வளைத்தான்`` என்றார்.
அதுக்குதல், பொதுக்குதல் என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. அதுக்குதல் வாயில் இட்டுச் சுவைத்தல். பொதுக்குதல், உடம்பில் தைத்தலும், தைக்கச் செய்தலும்.
`ஆர்கலி அதுக்கிய ஆரமுது ஊற` என்க.
``பாய்புலி`` என்றதனால், `பதுங்குதல் காட்டில்` என்பது பெறப்பட, அதனால் `ஒருவன்` என்னும் எழுவாய் பெறப்பட்டது. ஒருவன் உயிர்.
பெத்த நிலையில் நிற்பார்க்கு மாயா உடம்பே உடம்பாகவும் முத்தி நிலையில் நிற்பார்க்கு அருளே உடம்பாகவும் நிற்றலும், முறையே அவற்றால் விளையும் துன்ப இன்பங்களும் இதனால் உள்ளுறையாகக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage