ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

English Meaning:
Holy Way is Strewn With Thorns

The Holy Way is by thorny bushes covered
They know not how to remove it;
They who know how to remove it
Are they for whom my heart yearns.
Tamil Meaning:
அனைவரும் சிறிதும் துன்பம் இன்றி மிக இன்பத்துடன் நடந்து செல்லத் தக்க நல்ல வழி ஒன்று இருக்கின்றது. ஆயினும் முட்புதர்கள் பல அதனை மூடிக்கிடக்கின்றன. அதைத் தெரிந்து அப்புதர்களை நீக்கி நல்வழியைக் கண்டு நடப்பவர் மிகச் சிலராகவேயிருக்கின்றனர். அந்தச் சிலர்மேல்தான் எனது உள்ளத்தில் உள்ள அன்பு கரந்து பாய்கின்றது.
Special Remark:
`நல்ல வழி` என்றது, நாயனார், ``சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` எனவும், ``சேயினும் நல்லன், அணியன் நல்ல அன்பர்க்குத் - தாயினும் நல்லன் தாள்சடையானே``3 எனவும் முதற்கண் கூறி அவனை அவ்வாறுணர்ந்து நிற்கும் நெறியை.
தூறுகளாவன, அச்சிவனை, ``அவன் தாமச குணத்தன், பித்தன்; சாம்பலைப் பூசிக்கொண்டு, எலும்பு மாலைகளையும், தலைமாலைகளையும் அணிந்துகொண்டு சுடுகாட்டில் ஆடுபவன்`` என்பனபோல் இகழ்ந்து கூறும் உரைகள்.
``இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்``l
என்னும் அம்மை திருமொழியையும் நோக்குக. அதனுள், ``பொருள்` என்றது, `உண்மை` என்றபடி. ஈற்றடி, `நல்லார்கண் நல்லான் அன்பு செய்வர்` என்பதை உணர்த்தி நின்றது.
இதனால், `சிவநெறியாகிய நன்னெறியை இகழ்ந்து கூறும் புன்னெறிகள் உள; அவற்றை அறிந்து விலக்கி அந்நன்னெறிக் கண் செல்ல வல்லார் மிகச் சிலரே` என்பது உள்ளுறையாக உணர்த்தப் பட்டது. ``சைவ சித்தாந்தத் - தேனமு தருந்தினர் சிலரே``l எனக் குரம குருபர அடிகளும் குறித்தருளினார். எனக் குமர குருபர அடிகளும் குறித்தருளினார்.