
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.
English Meaning:
Reach Nada by Yoga and Attain Status of GodIn the House of Goldsmith1 a Child2 flourishes,
A Conch of Call3 there is;
Blow it and call the Lord in Joy;
To the Potter4 and the Titled Minister5 alike
Are granted the high state;
That do you seek.
Tamil Meaning:
தட்டான் - எதிலும் அகப்படாதவன். ஆறு அத்துவாக்களையும் துருவித் துருவி ஆராய்ந்தாலும் அறியப்படாதது ஆன்மா. அதன் அகம், தூல உடம்பு. அதில் வளர்கின்ற பிள்ளை மூச்சுக்காற்று. தளிர்த்தல் - வளர்தல். விளித்தல் - அழைத்தல். சங்கு குறிக்கப்பட்டால் குழந்தைகள் அதனை நோக்கி ஓடுதல் இயல்பு. சங்கு, இங்கு `ஹம்ஸம்` என்னும் அசபா மந்திரம். அதுவே மூச்சினை விட்டும், வாங்கியும் இயக்குதலால், அதனை அக்குழந்தையை அழைக்கும் சங்காகக் கூறினார். அம்மந்திரத்தின் பயனை ஆராய்ந்து உணர் பவர்கட்கு அஃது, அரசனைச் சார்ந்த குயவர் முதலிய சிறு தொழிலா ளர்க்கும், காவிதிகள் முதலிய பெருமையுடைய தொழிலாளர்க்கும் அரசன் இடும் கட்டளையாக முடியும். அக்கட்டளைகளாவன `போ, வா` என்பன. சிறுதொழிலாளர்களை அரசன் அகன்று செல்லும்படியும், பெருந்தொழிலாளர்களை அணுகி வரும்படியும் கூறுவான். `போ` என்பது இரேசித்தலையும், `வா` என்பது பூரித்தலையும் குறித்தன. காவிதிகள், வரி தண்டுவோர். பதம் - சொல். `தனித்தனி ஒன்றாம்` என்க. `அச்சங்கு` எனத்தோன்றா எழுவாய் வருவித்து, `பதத்து ஒன்றாம்` என முடிக்க. ``குசவர`` என்றது உபலக்கணம்.Special Remark:
இதனால், `யோகத்தை அசபா மந்திரத்தை உணர்ந்து செய்யும் பிரணவ யோகமாகச் செய்தல் வேண்டும்` என்பது, உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage