ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

English Meaning:
Do not Cultivate the Waste of Worldly Pleasures

Why they plough the waste, we know not,
They who plough the waste have design none,
They who plough the waste perish,
Like the young weeds
That waste shoots.
Tamil Meaning:
வினை நிலம் இருக்கப் புல்லும் முளையாத களர் நிலத்தை உழுகின்றவர்கள் அதில் தப்பித் தவறி முளைத்த வஞ்சிக் கொடியின் பொலிவினைக் கண்டு, `அஃது உணவாகும்` என்று மயங்கிப் பின் அஃது அவ்வாறு ஆகாமையால். பட்டினியால் இறத்தலும் கூடுவதே. இவ்வாறு களர் நிலத்தை உழுகின்றவர்கள் `நாம் ஏன் இதனை உழுகின்றோம்` என்றும் எண்ணுவதில்லை. ஆகவே, அவர்களது குறிக்கோளாக நாம் ஒன்றையும் அறியவில்லை.
Special Remark:
`அவர்களது செயலுக்கு அவர்களது முன்னை வினைதான் காரணம்` என்பது குறிப்பெச்சம். விளைநிலம், சிவநெறி; தவநெறி. களர் நிலம், உலகர் நெறி. அதில் தப்பித் தவறி முளைக்கும் வஞ்சிக் கொடியாவது மகளிர் இனம். ``குறிக்கோளிலாது கெட்டேன்``* என்றார் அப்பர் பெருமானும். இம்மந்திரத்தின் அடிகளை 3,4,2,1 என்னும் முறையிற் கூட்டிக் காண்க.
இதனால், `உலகர் வழிபட்டுக் குறிக்கோள் இலாது நாளைக் கழித்தல் பிழை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.