ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை

பதிகங்கள்

Photo

போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

English Meaning:
Down of Jnana in Sahasrara

The Day dawned, a golden hue it took,
On the banks high, the Mastwood shed its golden pollen;
Thus it is where the Holy Lord abides;
That Sphere the Damsel reached and remained.
Tamil Meaning:
பொழுது விடிந்துவிட்டது. அதனால், மலர்களை யுடைய புன்னைமரம் விளங்குகின்ற, கடலின் இக்கரை, அக்கரையாகிய இருகரைகளும் பொன்னிறம் பெற்று விளங்குவன வாயின் ஆகவே, அந்தக் கரைகள் சிவனும், சத்தியும் எழுந்தருளி யிருக்கும் இடமாகவும் ஆகிவிட்டன.
Special Remark:
பொழுது விடிதலாவது, ஆணவ மலம் நீங்குதல். ``தாதவிழ் புன்னை`` என்னும் அஃறிணை யியற்பெயர். இங்குப் பன்மையில் வந்து, பல உயிர்களைக் குறித்தது. புன்னை அரும்பு ஆன்ம பூதம். அவ்வரும்பு மகரந்தத்தோடு மலர்தலாவது, திருவருள் உணர் உடையதாய் விரிவடைதல் பொழுது புலர்ந்தால் புன்னை மகரந்தத்தோடு மலர்தல் போல, ஆணவம் நீங்கியதால் ஆன்மாக் களின் அறிவு சிவகணமாகிய திருவருள் உணர்வைப் பெற்று விரி வடைந்தது. இரு கரை, பெத்த முத்திகள். முத்தியில் ஆன்ம உணர்வு சிவணம் பெற்றுத் திகழ்தல் நன்கறியப்பட்டது. பெத்த நிலையிலும் அவ்வுணர்வு அன்ன தாதல் சீவன் முத்தி நிலையிலாம் ஆகவே, ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. ஆணவ மலம் நீங்கினால், ஆன்மா இவ்வுடம்போ -டிருக்கும் பொழுதே முத்தியை அடைந்து நிற்கும்` என்பது உணர்த்திய வாறு. ``பொன்னிறங் கொண்டது`` என்பது அழகு பெற்று விளங் -குதலைக் குறித்தது. புன்னை மலரின் மகரந்தம் பொன்னிறம் உடையது. தயங்குதல் - விளங்குதல்.
பிறவி `கடல்` என்றும், முத்தி `அக்கரை` என்றும் சொல்லப் படுதலால், பெத்தத்தை `இக்கரை` என்றார். `இருகரையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. பன்மையொருமை மயக்கம். ``போதும்`` என்னும் உம்மைச் சிறப்பு.
`மாதர், சத்தி, சிவமும், சத்தியும் இருக்கும் இடம்` என ஒருங்கு கூறற்பாலதனை வலியுறுத்தற் பொருட்டுத் தனித்தனியே கூறினார்.
இதனால், ``ஆணவ இருள் நீங்கினால், `அம்மை` என்பதின்றி இம்மையே முத்தியாம்`` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.