ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
    அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
    புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
    தவனச் சடைமுடித் தாமரை யானே. 
  • 10. கடந்துநின் றான்கம லம்மல ராதி
    கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
    கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
    கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 
  • 11. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
    வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
    சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
    நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 
  • 12. கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
    மாது குலாவிய வாள்நுதல் பாகனை
    யாது குலாவி அமரருந் தேவரும்
    கோது குலாவிக் குணம்பயில் வாரே
  • 13. காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
    மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
    தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
    ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 
  • 14. அதிபதி செய்து அளகையர் வேந்தனை
    நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
    அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
    இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே. 
  • 15. இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
    முதுபதி செய்தவன் மூதறி வாளன்
    விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
    அதுபதி யாக அமருகின் றானே. 
  • 16. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
    அடிகள் உறையும் அறனெறி நாடில்
    இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
    கடிமலர்க் குன்றம் அலையது தானே. 
  • 17. மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
    நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
    எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
    பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 
  • 18. வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
    நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
    இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
    அல்லும் பகலும் அருளுகின் றானே. 
  • 19. போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
    தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
    மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
    மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 
  • 2. அவனை ஒழிய அமரரும் இல்லை
    அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
    அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
    அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 
  • 20. காணநில் லாயடி யேற்குற வாருளர்
    நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
    கோணநில் லாத குணத்தடி யார்மனத்
    தாணிய னாகி அமர்ந்து நின் றானே. 
  • 21. பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
    இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
  • 22. தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
    படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
    கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
    புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
  • 23. சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
    தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
    நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
    புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 
  • 24. இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
    பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
    உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
    வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 
  • 25. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
    ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
    கானக் களிறு கதறப் பிளந்தஎங்
    கோனைப் புகழுமின் கூடலு மாமே. 
  • 26. வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
    தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
    ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
    நானின் றழைப்பது ஞானங் கருதியே. 
  • 27. மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
    விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
    பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
    கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 
  • 28. தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
    மேவு பிரான்விரி நீருல கேழையும்
    தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
    பாவு பிரான்அருள் பாடலு மாமே. 
  • 29. பதிபல வாயது பண்டிவ் வுலகம்
    விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
    துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
    மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 
  • 3. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
    தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
    தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
    பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 
  • 30. சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
    வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
    ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
    போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 
  • 31. ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
    போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
    மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
    ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.
  • 32. அப்பனை நந்தியை ஆரா அமுதினை
    ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
    எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
    அப்பரி சீசன் அருள்பெற லாமே. 
  • 33. நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
    தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
    வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
    தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
  • 34. பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
    பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
    பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
    பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே. 
  • 35. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
    தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
    ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
    ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே. 
  • 36. குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
    நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
    மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
    புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே. 
  • 37. சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
    புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
    கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
    இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
  • 38. போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
    நாயக னான்முடி செய்தது வேநல்கும்
    மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
    வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 
  • 39. அரனடி சொல்லி அரற்றி அழுது
    பரனடி நாடியே பாவிப்ப நாளும்
    உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
    நிரனடி செய்து நிறைந்துநின் றானே. 
  • 4. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
    ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
    சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
    தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 
  • 40. போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
    போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
    போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
    போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 
  • 41. விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
    விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
    துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
    பதிவழி காட்டும் பகலவ னாமே. 
  • 42. அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
    சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
    முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
    வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே. 
  • 43. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
    நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
    பனையுள் இருந்த பருந்தது போல
    நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே. 
  • 44. அடியார் பரவும் அமரர் பிரானை
    முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
    படியார் அருளும் பரம்பரன் எந்தை
    விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
  • 45. பரைபசு பாசத்து நாதனை உள்ளி
    உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
    திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
    கரைபசு பாசங் கடந்தெய்த லாமே. 
  • 46. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
    பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
    றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
    நாடுவன் நானின் றறிவது தானே. 
  • 47. அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
    அளவியல் காலமும் நாலும் உணரில்
    தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
    அளவில் பெருமை அரிஅயற் காமே.
  • 48. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
    ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
    சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
    பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 
  • 49. ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
    பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
    ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
    தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
  • 5. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
    பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
    என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
    தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
  • 50. சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
    அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
    அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
    சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.
  • 51. பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
    அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
    நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
    வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.
  • 52. ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
    பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
    மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
    ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
  • 53. வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
    தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
    தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
    ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
  • 54. சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
    ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
    நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
    பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.
  • 55. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
    வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
    தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
    கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
  • 56. தானொரு கூறு சதாசிவன் எம்இறை
    வானொரு கூறு மருவியும் அங்குளான்
    கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
    தானொரு கூறு சலமய னாமே.
  • 6. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
    இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
    முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
    பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
  • 7. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
    எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
    மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
    அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
  • 8. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
    எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
    விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
    கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
  • 9. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
    படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
    அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
    முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.