ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

English Meaning:
Assign Not Ranks To Trinity
The ignorant know not from the First did leap
The Light that flamed into Three and Five;
So blindly groping, lost in maze of words,
Isa, Mal and Aya, to graded ranks assign.
Tamil Meaning:
சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.
Special Remark:
`அவர் உரை பொருளாதல் இன்று` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றதனால், `அநாதி` என்பதும், நீதி நூல் என்றதனால் ``சிவதன்ம நூல்`` என்பதும் கொள்ளப்பட்டன. நீதி - உலகியல்; இஃது ஆகுபெயராய் நின்றது. ``நீதிக்கண் நின்று`` என ஒருசொல் வருவிக்க. ஈசன் முதலிய மூவரும் நின்று` என ஒரு சொல் வருவிக்க ஈசன் முதலிய மூவரும் பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறாயினார். `அவரைப் பேதித்துப் பிதற்றுகின்றார்` என மாறிக் கூட்டுக.
`உலகியல் நூல், பல்வேறு சமயத்தாருக்கும் பொது வாய அறங்களைக் கூறும் நூல், அஃது `முதற்கடவுளாவது இதுவே` என ஒருதலையாக ஒருதெய்வத்தை வரையறுத்துணர்த்தாமையின், அதனையே பற்றி நிற்பார்க்கு மலைவுண்டாதல் இயல்பு` என்பதும், `அம்மலைவு, மெய்ந்நெறி நூலை உணர்வார்க்கு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு அறிக.