ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே. 

English Meaning:
Sea Of Bondage
They who adore the Lord of soul and its limitation,
And released from the bondage,
Are able to cross the ocean of samsara
And reach the other shore of it.
Tamil Meaning:
தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.
Special Remark:
``உரை பசு பாசம்`` என்பதில், ``பாசம்`` என்றது உடம்பை. ``உள்ளி உரை பாசத்து ஒருங்க`` என்றது, `மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் அவனிடத்தே ஒரு நெறிப்பட` என்றவாறு. ``திரை`` என்பது, ``கடல்`` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. பாவம் - உளதாந்தன்மை; என்றது பிறப்பை. செழுமை, அளவிடப்படாத அகல ஆழங்கள். `நீந்திக் கடந்து கரை எய்தல் ஆம்` எனக்கூட்டுக. ஆதல் - கூடுதல்.