ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

English Meaning:
Siva Is Jiva

"Our God, Shiva, indeed stands as 'Shantyadita' in one aspect, embodying the form of Sadashiva. In another aspect, he appears as the life of the living, known as Laya Shiva, conveying understanding. In yet another aspect, he is the hidden power that leads through attachments. In a different aspect, he exists as the grace that removes attachments and grants himself."
Tamil Meaning:
எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.
Special Remark:
`அதனால் அவனது நிலைவேறுபாடுகளை அறிதல் உயிர்கட்கு அரிது` என்பது கருத்து. `இந்நிலையெல்லாம் தன் இச்சையாற் கொள்வனவே` என்றற்கு முதற்கண், ``தான்`` என்றார். சாந்தியதீத கலையும் ஆகாயம் எனப்படுமாறு அறிக. உண்மையை ``அங்கு`` என்பதனுடன் கூட்டுக. ``கோன்`` என்றது. `எசமானன்` என்னும் பொருளது. பாசத்தின் வழி நின்று நடத்துதலை, `உடலுள் நின்று உயிர்த்தல்` என்றார். இறுதிக் கண் நின்ற ``ஒரு கூறு`` என்றது முன்னும் சென்று இயையும், ``ஆம்`` என்பதனை, ``தான்`` என்றதற்கும் கூட்டுக. தண்ணியனாதல் பற்றி அருள்வோனாதலை, ``சலமயன் ஆம்`` என்றார்.