ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 

English Meaning:
Adore Him
Many the gods this hoary world adores,
Many the rituals; many the songs they sing;
But knowing not the One Truth, of Wisdom bereft
Unillumined, they can but droop at heart.
Tamil Meaning:
பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.
Special Remark:
`அதனால் சிவனது முதன்மையாகிய மெய்ம் மையைத் தெளிவித்தல் அரிதேயாம்` என்பது குறிப்பெச்சம். பதி - கடவுள்.