
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.
English Meaning:
In Mount KailasIf we pursue the path that leads to the Abode,
Of Him who of yore created birth and death,
We shall find Him in the holy hill of Kailas
Resonant with thunders and fragrant with flowers.
Tamil Meaning:
உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.Special Remark:
`ஆதலின், அந்நூல்களின்வழி நின்று தவம் செய்து அவனது திருவுருவை விளங்கக் கண்டு பயன் பெறுக` என்பது குறிப் பெச்சம். ``அறனெறி`` என்றது காரியவாகு பெயராய் அதனை உணர்த்தும் நூலைக் குறித்தது. அறம், இங்குச் சிவதன்மமாதலின் அதற்கு, `தவம்` எனப் பொருள் உரைக்கப்பட்டது. சிவதன்மத்தைக் கூறும் நூல்கள் சிவாகமங்கள். அவை இறைவன் திருவருள் வடிவா மாகலின், அவற்றை அவனுக்கு உறைவிடமாக அருளினார். அதனால் அந்நூல்கள் அவனது திருவருளை அங்கை நெல்லிக் கனியென இனிது விளக்குதல் பெறப்பட்டது. `அவற்றின்வழி நிற்பின் அப்பெருமான் அநுபவப் பொருளாதல் தப்பாது` என்றற்கு, `அவனது உருவம் மலையும், கடலும்போல விளங்குவது` என்றார். ``முழக்கம்`` என்றது, முழங்கும் பறைகளைக் குறித்த காரியவாகு பெயர். இதன்பின், `போலும்` என்பது எஞ்சி நின்றது. கடி - மணம். மலைகள் மணம் நிறைந்த மலர் மரங்களை உடையவாதல் அறிக. அலை, ஆகுபெயர். `அரனெறி` என்பதும் பாடம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage