ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 

English Meaning:
Grants All
To Those who seek Him, the Lord`s grace flows umimpeded
Even if one is able to orbit the world,
He cannot achieve anything without the grace of
The Lord, the consort of the Mother of shoulders reed- shaped.
Tamil Meaning:
சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.
Special Remark:
``நான்`` என்றது, `நான்` என்னும் முனைப்பிற்குக் காரணமான பசுபோதத்தைக் குறித்த காரியவாகுபெயர். முடி - முடிவு; முதனிலைத் தொழிற்பெயர். `செய்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இஃது எதிர்காலத்து இறந்த காலம். ``அது`` என்றது, ``அந்தப்பயன்` எனச் சிவபோதத்தை உணர்த்திற்று. ஆணவ சத்தி மெலிதல், அனாதிதொட்டே நோக்கிவரும் இறைவனது திரு வருள் நோக்கத்தாலாதலின், `நாயகன் முடிசெய்த அது` என்றார். `பெறுவது` எனக் கூறிப் பின்னரும், `நல்கும்` என்றார்; `தானே விரும்பிக் கொடுப்பான்` என்பது உணர்த்துதற்கு. ``அகம்`` என்றது, `நான்` என்னும் பொருளதாகிய வடசொல், ``அகத்தால்`` என உருபு விரித்து, சூழ்தற்குச் செயப்படு பொருளாகிய, `சிலவற்றை` என்பது வருவிக்க. ``வல்லர்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ஒன்றுதல் - உடன்படுதல்; அது, கொடுத்தலாகிய தன் காரியம் தோன்றநின்றது. சிவபெருமானை வாழ்த்துவார், போகம், மோட்சம் இரண்டும் பெறுவர் என்பது உணர்த்தியவாறு.