
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
English Meaning:
Unflickering LampThe Lord of gods, whom the pious adore,
To Him I bend my knees and His Grace invoke,
The Lord, Our Father, blessing us of earth,
The Lamp that flickers not, Him I seek.
Tamil Meaning:
மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்.Special Remark:
மெய்யுணர்ந்தோரே சிவனுக்கு ஆட்படுவாராதலின், அடியாராவர் அவரேயாதல் அறிக. `படி ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``முடியால்`` என்றதற்கேற்ப, `மனத்தால்` என்பது வருவிக்கப்பட்டது. ``வணங்கி, முன்னி`` என்று ஒழிந்தாராயினும், முன்னர் ``பரவும்`` என்ற குறிப்பால், வாயால் வாழ்த்தலும் பெறப்பட்டது. ``அமரர் பிரான்`` முதலாக வந்த சிறப்பினால் வணங்கப் படுதல் முதலியவற்றிற்கு அவனே உரியவன் எனக் குறித்தவாறு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage