ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே. 

English Meaning:
Adore And Attain Grace
He, the Divine Light, shining bright in devotee`s heart
He, the pure One, sporting therein
Him shall we praise, Him call, ``Our Lord``,
And, thus adoring, His Grace attain.
Tamil Meaning:
தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.
Special Remark:
``அங்கே`` என்பது ``தீர்த்தன்`` என்பதனோடும் இயையும். ``திளைக்கின்ற`` என்பது, ``தேவன்`` என்ற செயப்படு பொருட்பெயர் கொண்டது.