
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
English Meaning:
Trinity Are Co-EqualsLying prostrate I adored the Milk-hued One,
While countless Devas stood around in melting prayers lost;
Then spoke the Lord to me:
``To Vishnu and Brahma am I equal;
Be it Yours to give the world
The Grace of My Feet.
Tamil Meaning:
எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.Special Remark:
`ஆகவே, மக்களுலகத்துள்ளாரைச் சிவபெருமான் மாலும் அயனுமாகச் செய்தல் உண்டு` என்றவாறு. ``உலப்பிலி தேவர்கள்`` என்றதை முதலிற் கூட்டுக. சிவபெருமானது திருமேனி, பால் போலுதல் திருநீற்றுப் பூச்சினாலாம். இனிபால், இனிமை பற்றிவந்த உவமை என்றலுமாம், அருளை, `அடி` என்றல் மரபு என்பது, ``இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்ற சிவஞான சித்தியானும் (சுபக்கம் - பாயிரம் - 4) உணர்க. திருமாலும், பிரமனும் வேதம் முதலியவற்றால் பலர்க்குச் சிவபிரானது திருவருட் பெருமையைப் பலர்க்கு உணர்த்துவோராதல் அறியத்தக்கது. `ஞாலக்கு` என்பதே பாடம் போலும். நாயனார்க்கு சிவபெருமான் இவ்வாறு ஆணை தந்தது நந்திதேவர் வாயிலாக என்க. இனித் திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ் இருந்து கண்ட யோகக் காட்சியில் என்றலும் பொருந்துவதேயாம், இவ் ஆணையின் வழி நல்கப்பட்டதே இத் திருமந்திர மாலை என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage