ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

English Meaning:
Trinity Are Co-Equals
Lying prostrate I adored the Milk-hued One,
While countless Devas stood around in melting prayers lost;
Then spoke the Lord to me:
``To Vishnu and Brahma am I equal;
Be it Yours to give the world
The Grace of My Feet.
Tamil Meaning:
எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.
Special Remark:
`ஆகவே, மக்களுலகத்துள்ளாரைச் சிவபெருமான் மாலும் அயனுமாகச் செய்தல் உண்டு` என்றவாறு. ``உலப்பிலி தேவர்கள்`` என்றதை முதலிற் கூட்டுக. சிவபெருமானது திருமேனி, பால் போலுதல் திருநீற்றுப் பூச்சினாலாம். இனிபால், இனிமை பற்றிவந்த உவமை என்றலுமாம், அருளை, `அடி` என்றல் மரபு என்பது, ``இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்ற சிவஞான சித்தியானும் (சுபக்கம் - பாயிரம் - 4) உணர்க. திருமாலும், பிரமனும் வேதம் முதலியவற்றால் பலர்க்குச் சிவபிரானது திருவருட் பெருமையைப் பலர்க்கு உணர்த்துவோராதல் அறியத்தக்கது. `ஞாலக்கு` என்பதே பாடம் போலும். நாயனார்க்கு சிவபெருமான் இவ்வாறு ஆணை தந்தது நந்திதேவர் வாயிலாக என்க. இனித் திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ் இருந்து கண்ட யோகக் காட்சியில் என்றலும் பொருந்துவதேயாம், இவ் ஆணையின் வழி நல்கப்பட்டதே இத் திருமந்திர மாலை என்க.