ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியா நினைவதென் காரண அம்மையே.

English Meaning:
Sakti`s Grace from Siva Worship

As I realized Him, our Isa
I lost my self;
As I united in Him
I became one with Him;
As I embraced the Lord of worlds all,
I remained in divine fulfillment;
As I entwined at the Primal One`s Feet
I received His Sakti`s Grace.
Tamil Meaning:
ஒப்பற்ற தலைவனாகிய சிவனோடே எனது நெஞ்சத்தை விரும்பி இனியவளாய் இருக்கின்ற சத்தி ஏழுலகத்திலும் நிறைந்திருப்பவளே. ஆயினும், எனக்குத் தாயாகிய அவளை நான் நல்ல புதுமலர்களைக் கையில் கொண்டு உண்ணுவது உள்ளங்கை நெல்லிக்கனியாகவே.
Special Remark:
`இனியார்` என்பது பாடம் அன்று. ``பனியால்`` என்றது, `குளிர்ச்சியோடு` என்றவாறு. காரண அம்மை - ஈன்ற தாய். `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. `அம்மையைப் போது கை ஏந்தி நினைவது கனியா`` எனக் கூட்டுக.
இதனால், சத்தி பெரியவளும், அரியவளுமாயினும், வழி படுவார்க்கு எளியளாதல் கூறப்பட்டது.