ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

English Meaning:
She is Kriya Sakti, Bhoga Sakti and Parasakti

She conceives worlds seven;
She is Yogini Sakti,
She cognizes life and as its support stands;
Of yore she joined the Lord in creative union
And became Bhoga Sakti;
And then She was Param Herself (Parasakti)
Undifferentiated from Siva.
Tamil Meaning:
சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி, தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச் சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச் சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.
Special Remark:
`என்றது, சத்தி படைப்புக் காலத்தில் இறைவனது சங்கற்பரூப ஆதி சத்தியாய் நின்று உலகைத் தோற்றுவித்துப் பின் யோகினி சத்தியாய் உலகெங்கும் வியாபித்துப் பின் இறைவனோடு இணைந்து நின்று போக சத்தியாகி உலகிற்குப் போகத்தைத் தந்து, உலகிற்குத் தலைமை பூண்டு நிற்கின்றது` என்றவாறு. முதலடி மூன்றாம் அடிகளில் `உணர்ந்த, புணர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரங்களும் தொகுத்தலாயின. `இசைந்த` என்பதன் அகரமும் அன்னது. `யோக சத்தி` எனின் பிறிது பொருள் படுமாகலின் `யோகினி` என்றார். எனவே, இதனை யாமள தந்திரங் கூறும் யோகினிகளாகக் கொள்ளுதல் பொருந்தாமை அறிக. `அதனோடு` என உருபு விரிக்க. ஆதி, பரம் இவை இங்குத் தலைமை. `இதுதானே ஆதி` என மேலே கூட்டி முடிக்க.
இதனால், `சத்தி `யோகினி` என நின்று ஆதார ஆதேயங் களாய்ப் போகத்தைப் பயப்பித்தல் கூறப்பட்டது.