ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

English Meaning:
You Will Attain Supreme State

The states of Brahma, Vishnu, Hara, Maheswara
All these but lead to Aum;
If Aum pervaded, you reach to Centres nine within
You shall honey-sweet divine become,
You shall in rapture sing,
You shall reach State of Greatness Surpassing.
Tamil Meaning:
சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களில் முறையே பொருந்தியிருக்கும் அயன், மால், உருத்திரன், மகேசுவரன் என்னும் இவர்கட்கு மேல் உள்ள `விந்து` நாதம்` என்பவற்றுக்குரிய சதா சிவனும், அவனுக்கு மேற்பட்ட சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்னும் நால்வரும் ஆகிய ஒன்பதுபேர் நிலைகளிலும் யோக நெறி யால் பொருந்தியவழி ஆன்மா இன்ப மயனாய்த் தேனுண்ட வண்டு அக்களிப்பினால் இசைபாடித் திரிவதுபோலுந் தன்மையை அடைவான்.
Special Remark:
`மாலாங் கதி` என்பது பாடம் அன்று. கதி - தானம்: இடம். `ஒன்பதும்` எனத் தொகை கூறவே, `மேலாங்கதி நான்கு` என்பது பெறப்பட்டது. `தேமயனாய்` என ஆக்கம் வருவிக்க. மா - வண்டு. எய்தல், எய்தப்பெறுதல்.
இதனால், சிவ, `சத்தியைப் பிரணவ யோகத்தால் தலைப் படுதல் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.