
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
English Meaning:
How Yoga Sakti was SeatedThe bejewelled One, Kundalini,
The Gods that are Three
The Shining garland of Adhara six,
The Kalas twice-eight,
The Jnana Sakti in forehead seated,
The Congregation of Mantreswaras,
All arrived to praise Her;
Thus She was, the Yoga Sakti, seated.
Tamil Meaning:
மேற் கூறப்பட்ட யோக சத்தி `அயன், மால், உருத்திரர்` என்னும் மும்மூர்த்திகளும், அவர்களுக்குத் தேவியராய் உள்ளோரும், ஒளியை உடைய ஆதாரங்கள் ஆறுமாய் உள்ள ஆதார சத்தியும், `கலை` என்னும் பொருளாகச் சொல்லப்படுகின்ற மேதை முதல் உன்மனை ஈறாக உள்ள பதினாறு நிலைகளையுடைய குண்ட லினியும், மக்கள் அறிவில் பொருந்திப் புலன்களை அறிவிக்கின்ற திரோதாயியும், மந்திர மகேசுவர மகேசுவரிகளாய் உள்ள கூட்டத் தினரும் தன்னையடைந்து துதிக்கும்படி மேற்கூறிய மேல் நிலங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்.Special Remark:
`ஏந்திழையாளும்` என்பது பாடமன்று. ``மூவர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஏந்திழையார்`` என்றார். காந்துதல் - ஒளி வீசுதல். ஆரம் - சக்கரம். `கலையாகிய முதல்` என்க. மூதல் பொருள், பராசத்தியின் சிறுகூறாதல் பற்றித் திரோதாயியை வேறுபோலக் கூறினார். (ஆயம் - மகளிர் கூட்டம்) திணை விராய் எண்ணிய விடத்துப் பெரும்பான்மைபற்றி, ``சார்ந்தனர்`` என உயர்திணை முடிபு கொடுக்கப்பட்டன. இது முற்றெச்சம். `அச்சத்தி` எனச் சுட்டு வருவித்துக்கொள்க.இதனால், யோக சத்தியது உயர்வு இனிது விளங்கக் கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage