ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.

English Meaning:
Meet Sakti and Attain Jnana

Standing face to face
With Her that is bejewelled,
With their inner light realizing Her,
And uniting in Her,
In the thoughts of Jivas thus reached
All Jnana appears.
Tamil Meaning:
மேற்கூறியவாறு ஞானங்கள் தோன்றும்பொழுது; சிவமும், சத்தியுமே அவரவர் விரும்பித் தொழுகின்ற தெய்வங்களாய் நின்று அருள்புரிகின்ற உண்மை விளங்கும். சிவசத்தியே அவரவரது பக்குவ நிலைக்கு ஏற்ப மேற்கூறிய தெய்வங்களையே முதற் பொருளாகக் கூறும் பற்பல சமய நூல்களைப் படைத்தவாறும் புலப் படும். தாம் (மேற்கூறிய ஞானங்களைப் பெற்றோர்) சத்தியும் சிவ முமேயாய்விட்ட அந்நிலையிலும் அவ்விருவரும் தமக்கு இன்றி யமையாத உயிர்த் துணைவராய் நின்று உதவுதலும் காணப்படும்.
Special Remark:
`ஞானங்கள் தோன்றும் பொழுது` என்பது இயை பினால் கொள்ள நின்றது. வேண்டுருவாதலில், வேண்டுதல் பிறர் உடையதும், உருவாதல் பின்வரும் சத்தி சிவங்களுடையது மாயின. ``ஈன்றிடும்`` என்றது, `ஈன்றமை புலனாகும்` என்றவாறு. எய்திய - மேற்சொல்லிய உருவங்களைப் பொருந்திய. ``பல்கலை`` என்பதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. `எதிர்வந்து சான்றாகுவர்` என்பது, `உதவி புரிந்து நிற்றல் இனிது காணப்படும்` என்பதாம். முத்தி யின்பத்தையும் சத்தியும், சிவனும் அம்மை அப்பராய் நின்று நுகர் விக்கவே உயிர் நுகர்வதாக, `அறியாதார் சிலர்க்கு முத்தி நிலையில் சத்தி சிவரது உதவி வேண்டாத ஒன்று` என்னும் மயக்கம் உண்டாதல் போல, உண்மை ஞானிகட்கு உண்டாதல் இல்லை` என்பதை இறுதி யடியிற் கூறினார். இதனால், ஞானத்தின் பயன்கள் சில கூறப்பட்டன.