ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

English Meaning:
Sakti`s Grace from Siva Worship

As I realized Him, our Isa
I lost my self;
As I united in Him
I became one with Him;
As I embraced the Lord of worlds all,
I remained in divine fulfillment;
As I entwined at the Primal One`s Feet
I received His Sakti`s Grace.
Tamil Meaning:
இறைவனைப் போற்றுபவர், `நல்ல திருவடிகளை உடைய இறைவனே` என்றும், `அடியார்கட்கு மிக நல்ல பயனாய் உள்ளவனே` என்றும் அழைத்துப் போற்றுவர். அந்தத் திருவடிகளும், பயனுமாய் இருக்கின்ற பெருமையைப் பெற்றுள்ளவள் உயர்பெருந் தேவியாம் சத்தியே, இறைவனைப் பற்றிக்கூறும் நூல்களைக் கற்றுணர்ந்தவன் அறியும் பொருளாகிய இதனை அறிய வல்லவர்கட்கு இறைவனது அருளுலகத்தை அடைதல் சிறப்புப் பயனாகும்.
Special Remark:
இரண்டாம் அடியை முதற்கண் வைத்தும், `அப் பெருமை பெற்றாள்` எனமாற்றியும் உரைக்க. நல்தாள், துன்பம் துடைத்து இன்பத்தைப் பொழியும்தாள். கற்றான் அறியும் கருத்தும் இதுவேயாதலை வேறுபோலக் கூறினார், அதனது அருமை தோன்று தற்கு, திருவருளை, `சிவன்தாள்` என்றல் வழக்கு. அருளுலகம், சுத்தமாயா புவனமாகிய அபரமுத்தித் தானங்கள். சிறப்புப் பயனாவது, அவருக்கே உரியதாய்ப் பிறருக்கு உரித்தாகாதது.
இதனால், சத்தியை உணரவல்லவரே உண்மை ஞானத்தைப் பெறுபவராதல் கூறப்பட்டது.