ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.

English Meaning:
She is Pervasive Everywhere

She is Eternal Time embodied;
She pervades all thought and love;
She united in Jiva inseparably;
She is Malini (Uma); Makuli (Kundalini)
Mantra Chandika
(That blows away the troubles of Her devotees like a tornado)
She is Protectress,
She with Protector indivisible stands.
Tamil Meaning:
காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.
Special Remark:
`காலத்தி, கூலத்தி` என்பவை அத்துச் சாரியை தொக வந்தன. அனுகூலத்தை, ``கூலம்`` என முதற் குறைத்துக் கூறினார். ``எங்கு`` என்பது பெயர்த்தன்மைப்பட்டது. மாகுலம் - உயர்குலம்; அஃதாவது தெளிவிக்கும் தன்மை. சண்டிகை - வேகம் (மந்திரத்தினது ஆற்றல்) ஆகின்ற தன்மையுடையவள். பாலினி - பாலனம் செய் பவள். `சத்தியும், சிவனும் தம்மில் தாம் கூறாய் இருப்பர்` என்பதை விளக்க, ``பாலவன்`` என்றும், ``பாகமதாம்`` என்றும் கூறினார்.
இதனால், பல்வகைப் பெருமைகளும் உடையவளாகிய சத்தி சிவனது கூறாயே நிற்றல் கூறப்பட்டது.