
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
English Meaning:
Sakti Appears in Eye-Brow CentreShe is Fire, the Primal Being and Isa
She is Spheres Three,
The Wind and the rest of elements;
She fortifies Jiva,
And renders him youthful,
Flower bedecked She stands
In Jiva`s Eye-brow Centre.
Tamil Meaning:
`ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.Special Remark:
``ஆதியும், ஈசனும்`` என்பவற்றை முதலில் எழுவாயாக வைத்து, `மாருதம், ஆதியுமாய்` என ஆக்கம் வருவித்து, `ஏமம் ஆகின்றனர்` என முடிக்க. `ஆம் அதுவாகிய அங்கி` என்க. இதனுள் ``அது`` என்றது வேள்வித் தீயைக் குறித்த பண்டறி சுட்டு. `மா மண்டலம், மது மண்டலம்` எனத் தனித்தனிச் சென்று இயையும். மது, இங்கே அமுதம். பூதங்களில் மாருதத்தை ஆதியாகக் கூறினார். யோகத்திற்கு அது சிறந்ததாதல் பற்றி. `ஏமம்` என்பது இடைக் குறைந்து நின்றது. இதன்பின் உள்ள ``அது``, பகுதிப் பொருள் விகுதி. ``சீவன்`` என்பது, சொல்லுவாரது குறிப்பால், யோகத்தில் நிற்கும் சீவனைக் குறித்தது. `சீவனது சிகை` என்க. கோ - தலைமை; இஃது ஒரு சொல் தன்மை எய்தி நின்ற, `மலர்க் கோதை` என்பதனுடன் இரண்டாவதன் பொருள்படத் தொக்குநின்றது. கோதண்டத்தில்` என உருபு விரித்துக் கொள்க.இதனால், அனைத்துமாய் நின்று காத்துவருகின்ற சத்தி சிவன் என்பாருள் சத்தி யோகத்தில் விளங்கிநின்று நலம் செய்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage