
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.
English Meaning:
Pervasiveness of SivaSaktiFrom end to end of cosmic universe,
Nothing there is but the Bejewelled Mother,
It is all but Sakti and Siva conjoint
Like Sushumna and Kundalini.
Tamil Meaning:
ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.Special Remark:
``கனங்குழை யல்லது கண்டதொன்றில்லை`` என்றது, `சத்தியது கலப்பில்லாமல் எதுவும் இல்லை` என்றவாறு. ``கண்டன், கண்டி`` என்பன, `சிவம்` என்றும் `சத்தி` என்றும் வரையறுக்கப்படும் தன்மை யுடையவர்களாய் இருத்தலைக் குறித்தது. காரணம் - காரணத் தன்மை. ``குண்டிகை, கோளிகை`` என்பன ஆடவர் பெண்டிர் அவயவங்களை, `குண்டு` எனவும் `குழி` எனவும் மறைத்து வழங்கும் வழக்குப்பற்றி வந்தன. கோளிகை - கொள்வது. `கோளகை` என ஓதலுமாம், ஈற்றில், `அறியப்படும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.இதனால், சத்தியே உலக முதல்வியாயினும், அவள் சிவனைப் பற்றி நின்றே முதலாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage