ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

English Meaning:
She Entered My Sentience

Full-breasted She is,
Supple-waisted She is,
Spreading yellow-spotted is Her skin,*
Of Pure speech She is,
Soft-footed unto a feathery peacock She is,
She in my sentience entered,
How shall I describe it?
Tamil Meaning:
சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.
Special Remark:
துத்தி - பாம்பின் படப்பொறி. விரிதல் - பரத்தல். `துத்தி போல விரிந்து சுணங்கு` எனவும், `புத்தகம் போலும் சீறடி` எனவும் விரித்துக்கொள்க. தொத்தல் - பற்றுதல் `தொகுத்த` என்பதன் விகார மாகக் கொண்டு, `உள்ளீடான` என்று உரைப்பினும் அமையும். சத்தி சிவங்களது குறிப்பு முழுதும் உயிர்களால் அறிதல் கூடாது என்பதாம். ``புணர்வினை`` என்பது இரண்டாவதன் விரியாக முன்னர்க் கூறிய பொருளும், வினைத் தொகையாகப் பின்னர்க் கூறிய பொருளும் அமைவனவாம்.
இதனால், சிவம் சத்திகளது ஆதார ஆதேயங்களாய் நிற்கும் அருட்பெருமை கூறப்பட்டது.