ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

English Meaning:
Omniscience and Omnipresence of Sakti

She is Virgin that oversees directions eight,
She is One that pervades there,
She is beginningless Parasakti that everywhere are;
With fragrant flowers in hand,
And songs in their tongue,
The devotees pray and praise Her
In directions eight.
Tamil Meaning:
இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத் தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளை யுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.
Special Remark:
என்றது, `சத்தி, ஆதாரயோகத்தில் ஒளியுருவாயும், நிராதார யோகத்தில் உருவம் அற்ற அருவப் பொருளாயும் நிற்பாள்` என்றதாம். கன்னி - அழியாமை, ``இச்சந்திரன்`` என்றது, `இவ்வாறு கன்னி ஒளியாயுள்ள சந்திரன்` என்றவாறு. இதில் கன்னிமை இளமையைக் குறித்தது. ``சந்திரன்`` என்றது அவனது வடிவைக் குறித்த ஆகுபெயர். `சென்னியாகிய இருப்பிடத்தில் இருப்ப` என இயையும். `இருப்பிடத்தில்` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முன்னர் `சந்திரன்` என வந்தமையால், ``பதினாறு`` என்பது அவனது கலைகளைக் குறித்தது. நிரம்பிய சந்திரன் போல்வதாய், `சந்திர மண்டலம்` எனப்படுவது, நெற்றிக்கு மேலிடத்துள்ள ஆயிர இதழ்த் தாமரை மலராகும். ``பன்னி`` என்பது, `பத்நி` என்னும் ஆரியச் சொல்லின் சிதைவு. இதனையே முதற்கண் கொண்டு உரைக்க. ``பராசத்தி`` என்பது, `உருவத்தைக் கடந்தவள்` என்னும் அளவினதாய் நின்றது.
இதனால், சத்தியது ஆதார ஆதேயமாய் நிற்கும்நிலை உடலில் வைத்து உணர்த்தப்பட்டது.