ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.

English Meaning:
Sakti and Siva are in Letters Fifty-One

In letters Fifty and One
Sakti and Siva as one stand;
Thus was it through Time interminable;
That the State how
The Mother of flower laden tresses and Her Lord
Of yore have been,
Verily, verily is this true.
Tamil Meaning:
தொன்று தொட்டு வழிவழியாகச் சத்தி சிவர்களைப் போற்றிவருகின்ற மரபு, ஐம்பதெழுத்துக்களின் அதிதேவரிடத்து அவர்கள் நிற்கின்ற முறைமையில் வைத்தேயாம். சத்தியும், சிவமும் முதற்கண்ணே சார்ந்திருக்கும் இடம் அவ் எழுத்துக் களும், அவற்றின் அதிதேவருமாம். இஃது உண்மையான ஒன்று.
Special Remark:
`ஆதலின் இது மரபாயிற்று` என்பது குறிப்பெச்சம். எழுத்துக்களை வழிபடுமிடத்துச் சத்தியும், சிவமும் அவற்றின் அதி தேவர் வழியாய்ப் பயன்தருதலை உணர்தற்கு, ``ஓர் ஐம்பதின்மரும்`` என அருளினார். எழுத்துக்கள் அவற்றின் அதிதேவர் வழியாகவே பயன்தருதலை,
``எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவராம்
நண்ணிய விந்துவோடு நாதத்துக் - கண்ணிற்
பகர்அயன்மா லோடு பரமனதி தெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்`` 1
என்பதனானும் உணர்க. சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை சிறந்ததாதல் பற்றி அகாரம் முதலிய எழுத்துக்கள் முறையானே தொடர்ந்து வர அமையும் மந்திரங்களை, ``மாலா மந்திரம்`` எனச் சிறந்தெடுத்துப் போற்றுவர். பரம் - கடன்.
இதனால், சத்தி சிவ வழிபாட்டிற்கு எழுத்துமுறை (பீஜாக்கர மரபு) சிறந்ததாதல் கூறப்பட்டது. சத்தி வழிபாடு பற்றிக்கூறுவார், ஒப்புமை பற்றிச் சிவ வழிபாட்டினையும் உடன்வைத்துக் கூறினார்.