ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

English Meaning:
Conquer Karmas By Devotion to Sakti

You shall conquer fruits of your twin Karmas,
If you but with folded hands,
And devotion pure
Think of Her;
Whose Form is tender like a flower petal
Who is Virgin Eternal, Kundalini,
Whose eyes are painted in dark collyrium
Who is Sweetness Surpassing.
Tamil Meaning:
ஞானிகட்கு உரிய இருவினைப் பயனாவன, அம்மையிடத்தில் அன்பு செய்தலும் `செய்யாமையுமாகிய அவற்றால் வருவனவாம்.
Special Remark:
``ஆகும்`` என்பது எச்சம். குலாம் - விளங்குகின்ற, மாதுரிகை - இனிமையைச் செய்பவள். கைதவம் - வஞ்சனை; அஃது அவளை ஐய உணர்வுடன் எண்ணுதல். `கை தவமும் அஃது இன்றிக் கருத்துறு மாறும்` என்க. இவற்றால் விளையும் பயனை இவையேயாக உபசரித்துக் கூறினார். `இருவினைப் பயன் மாதுரிகையோடு கைதவ மும், அஃது இன்றிக் கருத்துறுமாறுமாம்` என இயையும். `கருத்து அவள்பால் உறுமாறு` என்க. `பிறரெல்லாம் எண்ணும் புண்ணிய பாவங்கள் போலாது ஞானியர் எண்ணும் புண்ணிய பாவங்கள் அம்மையை நினைதலும், நினையாமையு மேயாம்` என்றவாறு. எனவே, `அவரது எண்ணமே உண்மை` என்பது அறியப்படும். ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. அன்றி, ஒடு `அதனொடு மயங்கற்` பொருளது எனினுமாம்.
இதனால், உயர்ந்தோர்க்குச் சத்தியது வழிபாடு இன்றியமை யாததாதல் கூறப்பட்டது.