ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.

English Meaning:
Sakti`s Grace from Siva Worship

As I realized Him, our Isa
I lost my self;
As I united in Him
I became one with Him;
As I embraced the Lord of worlds all,
I remained in divine fulfillment;
As I entwined at the Primal One`s Feet
I received His Sakti`s Grace.
Tamil Meaning:
உயிர்களால், `அவன்` என்று சேய்மைச் சுட்டாகப் பொதுவே உணரப்படுபவனாகிய எங்கள் தலைவனாகிய சிவனை நான், `அவன் அன்ன அருமையினன்` என முதற்கண் உணர்ந்தேன். பின்னர் அவன் உலக முதல்வியாகிய சத்தியை யுடைய சத்திமா னாதலை அறிந்து அவனை அணுகினேன். அதன்பின்னர் அவனோடு ஒன்றினேன். முடிவாக ஒருஞான்றும் அவனை விட்டு விலகாத நிலைமையனாயினேன். இவையே நான் சிவனது திருவருளைப் பெற்ற முறைமை.
Special Remark:
`நீவிரும் அவ்வாறே பெற்றுய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். ``புவனாபதியார்`` என்னும் உயர்வுப்பன்மை ஒருமையோடு மயங்கிற்று. `ஈசற் புணர்ந்தொழிந்தேன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், `சிவனைச் சத்தி வழியாகவே பெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.