ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

English Meaning:
She Pervades the Three Spheres

She has Spheres Three
Of Fire, Moon and Sun
She is Head of all three together,
She abandons you not
Even if you forget Her;
She is Light within.
Tamil Meaning:
மேற்கூறிய உள்ளொளி உயர்ந்து செல்கின்ற ஆறு ஆதாரங்களாகிய உறுப்புக்கள் வெண்மையான வேள்வித் தீயிலும் அவற்றின் அதிதேவர் வழியாகச் சத்தியைப் பொருந்தி விளங்கும். அதனால், அத்தீயின் வழியாகத் தேவர்கள் ஏற்கின்ற அவிசுகளும், யாவர்க்கும், எல்லாப் பயனையும் தருகின்ற சத்தியே யாய் நிற்கும்.
Special Remark:
ஆகையால், `ஆதார தேவர்களும், ஏனைத் தேவர் களும் சத்தியால் நிலை பெறுகின்றவர்களேயாவர்` என்பதாம். ``உள் ளொளி யோங்கிய மூவிரண்டு அங்கங்கள்`` எனக்கூட்டுக. ``வெள் ளொளி அங்கி`` என்றது, `இனிது வளர்க்கப்பட்டு விளங்குகின்ற தீ` எனப் பொருள்தந்து, வேள்வித் தீயைக் குறித்தது. `மூவிரண்டு அங்கங்கள்` என்றதனால், அவற்றின் அதிதேவரை, ``அவர்`` எனச் சுட்டியொழிந்தார். ``கள்ளவிழ் கோதை`` என்னும் உயர்திணையிடத்து இரண்டனுருபு தொக்குநின்றது. `மூவிரண்டு அங்கங்கள் அங்கியில் அவரொடு மேவிக் கோதையைக் கலந்து உடனே நிற்கும்` என இயைத்து முடிக்க, சித்திக் கொடி சத்தி. `சித்திக்கொடியாகிய அமுதம்` என உருவகங் காண்க. `அவி அமுதேயாம்` என்க. `சுத்திக் கொடி` என ஓதிப் பிறிது பொருளுரைத்தல் பொருந்தாமை அறிக.
இதனால், சத்தி யோகியர்க்கு உள்ளமுதாதல் போலத் தேவர்க்கு வெளியமுதாய் நிற்றல் கூறப்பட்டது.