ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
    போயின நாடறி யாதே புலம்புவர்
    தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
    காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
  • 10. மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
    கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
    சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
    அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.
  • 11. அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
    சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
    புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
    வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.
  • 12. வள்ளல் தலைவனை வானநன் னாடனை
    வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
    கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
    உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.
  • 13. ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
    நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
    கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
    வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.
  • 14. விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
    பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
    திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
    வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.
  • 15. வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
    தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
    கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
    பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.
  • 16. விதியது மேலை யமரர் உறையும்
    பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
    துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
    மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.
  • 17. மேலது வானவர் கீழது மாதவர்
    தானிடர் மானுடர் கீழது மாதனம்
    கானது கூவிள மாலை கமழ்சடை
    ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.
  • 18. சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
    ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
    ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
    வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.
  • 19. உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
    அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
    நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
    செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.
  • 2. மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
    இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
    முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
    பன்னினர் என்றேதம் பாடறி வீரே.
  • 20. பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
    பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
    பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
    பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.
  • 21. அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
    பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
    தந்த உலகெங்குந் தானே பராபரன்
    வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
  • 22. முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
    அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
    அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
    மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.
  • 23. ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
    சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
    ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
    ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.
  • 24. அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
    பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
    கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
    தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.
  • 25. உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
    நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
    பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
    புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.
  • 26. பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
    பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
    தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
    நிராபர னாகி நிறைந்துநின் றானே.
  • 27. போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
    ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
    வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
    காற்றது ஈசன் கலந்துநின் றானே.
  • 28. திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
    மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
    புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
    முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.
  • 29. அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
    இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
    சிவன்றான் பலபல சீவனு மாகி
    நவின்றா உலகுறு நம்பனு மாமே.
  • 3. முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
    எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
    அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
    பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.
  • 30. கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
    தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
    விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
    உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.
  • 31. படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
    நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
    செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
    அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.
  • 32. ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
    ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
    தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
    வாச மலர்போல் மருவிநின் றானே.
  • 33. இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
    கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
    தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
    சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.
  • 35. மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
    கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
    ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
    வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.
  • 36. விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
    கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
    பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
    எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.
  • 37. உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
    நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
    எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
    சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.
  • 38.  நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
    அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
    மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
    புறம்பல காணினும் போற்றகி லாரே.
  • 39. இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
    பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
    கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
    எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.
  • 4. புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
    புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
    புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
    புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.
  • 40. உணர்வது வாயுமே உத்தம மாயும்
    உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
    புணர்வது வாயும் புல்லிய தாயும்
    உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.
  • 41. தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
    தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
    தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
    தன்வலி யாலே தடங்கட லாமே.
  • 42. ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
    தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
    வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
    தானே அறியும் தவத்தின் அளவே.
  • 43. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
    குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது
    உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள்
    பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.
  • 44. முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
    திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
    மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
    அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.
  • 45. ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
    ஊற தெனவும் உணர்க உணர்பவர்
    வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
    ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.
  • 46. ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
    அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
    அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
    முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.
  • 5. பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
    வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
    நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
    கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.
  • 6. நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
    ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
    ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
    காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
  • 7. நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
    ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
    வானோர் உலகம் வழிபட மீண்டவன்
    தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
  • 8. வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
    இந்திர னாதி இமையவர் வேண்டினும்
    சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
    அந்தர வானத்தின் அப்புற மாமே.
  • 9. மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
    எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
    உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
    தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.