
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.
English Meaning:
He Entered in MeHe entered in me,
He our Holy Lord,
He entered in me,
He the Lord of Jnana`s Flower,
He entered in the hearts of His devotees,
Him I adore, who entered in me.
Tamil Meaning:
பல்வேறு வகைப்பட்ட அறங்களையெல்லாம் தனது வடிவாகக் கொண்டிருத்தலால் `அற ஆழி` எனப்படுபவனும், எல்லா வற்றையும் ஒருங்கேயறிதலால், பேரறிவாளன் - முற்றுணர்வினன்` எனப்படுபவனும், எல்லாப் பொருள்களிலும் தான் நீக்கம் அற நிறைந் திருப்பினும் அங்கெல்லாம் பாலல் நெய்போல விளங்காது நின்று, தன் அடியவர் உள்ளங்களில் தயிரில் நெய்போல விளங்கி நிற்பவனுமாய் இருப்பவன் எங்கள் சிவபெருமான். அவன் என் உள்ளத்திலும் புகுந்துவிட்டமையால் அவனையே தோத்திரித்து நிற்கின்றேன்.Special Remark:
ஈற்றில் வந்த ``புகுந்து நின்றான்`` என்பது, `புகுந்து நின்ற அவன்` எனப்பொருள் தந்தது. புண்ணிய மூர்த்தி - அற வடிவினன். போது அறிவு - நிரம்பிய அறிவு. புகுதல், விளங் -குதலையே குறித்தது.இதனால், `சிவன் இத்தன்மையன் ஆகலின் அவனே தோத்திரிக்கப்படுதற்கு உரியவன்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage