ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

English Meaning:
Attain Jnana

In this world,
He pierced the overhanging Darkness of Ignorance;
Himself He has home none;
He is the Holy Preceptor of peerless grandeur;
I ate of the ripe fruit of His Jnana,
And I held on to the sweet Light within.
Tamil Meaning:
ஞானாசிரியன் தனது ஞானத்தால் அண்டங் கடந்த பொருளாய் உள்ளான். அவன் இவ்வுலகத்தில் இருப்பினும் ஏனையோர் போல `யான், எனது` என்னும் பற்றுடையவன் ஆகாது, பற்றற்றுத் தூயனாய் இருக்கின்றான். அவன் தந்த மலைவாழைக் கனியை நுகர்ந் -தமையால், நான் என்னுள்ளே ஊறுகின்ற அமுதமாயும், ஒளியாயும் உள்ள அம்மெய்ப் பொருளைப் பற்றி அசைவின்றி நிற்கின்றேன்.
Special Remark:
``போதகன்`` என்பதை முதலிற் கொள்க. போதகன், இங்கு ஞான போதகன், கானக வாழைக் கனி, இனிமைக்கு ஒன்றனை எடுத்துக் கூறியவாறு. பானகம் - இனிப்புடைய நீர்ப் பொருள். அஃது இங்கு அமுதத்தைக் குறித்தது. தனி - தனிமை. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது.
இதனால், சிவன் அவன் தானாகும்படி ஆவேசித்து அருளும் ஆன்ம சைதன்னியததின் சிறப்புக் கூறும் முகத்தால், அத்தன்மைத்தாகிய சைதன்னியத்திலன்றி ஆவேசியாத அவனது மாண்பு புகழ்ந்து கூறப்பட்டது.
``நம்செய லற்று,இந்த நாம்அற்றபின் நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற;
தன்னையே தந்தான்என் றுந்தீபற``1
என்னும் திருவுந்தியாரையும் காண்க.