ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

English Meaning:
None Knows Him Full Well

The Noble One is He,
A Sea of Joy beloved by all,
He is the Radiance of Pearl pure,
He is Dark-blue Throated,
Him they contemplate over time immeasurable,
The Siddhas holy and Celestials exalted,
Yet full well they know Him not.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமான், ஆகாயத்திற்கு உள்ள அருவத்தன்மையன், ஆயினும் உருவம் உடையவனே. கண்ணாற் காணப்படும் பொருளல்லன். ஆயினும் கண்ணாற் காணப்படுபவனே. ஒன்றை ஆக்கும் செயலின் பலனாய்த் தோன்றுவது பலத் தோன்றியவன் அல்லன்; ஆயினும் அத்தன்மை உடையவனே. ஆகவே அவன் எல்லையுட்படாத இன்பமும் ஆவான்.
Special Remark:
முதல் மூன்று அடிகளிலும் முன்னர்ச் சிவனது சொரூபத் தன்மையும், பின்னர்த் தடத்தத் தன்மையும் கூறப்பட்டன. `தடத்தத் தன்மையால் அளவுபட்ட இன்பத்தையும் தருவன்` என்றபடி. பண் - பண்ணுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எண்`` இங்கு அளவைக் குறித்தது. உம்மையால் எண்ணுடை ஆனந்தமும் பெறப்பட்டது. ஆனந்தம் இரண்டில் எண்ணில் ஆனந்தம் அவனே. எண்ணுடை ஆனந்தத்தைத் தருதல் பற்றி அதனையும் அவனேயாக உபசரித்தார். இதன்கண் பாடங்கள் வேறுபட்டன.