ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

English Meaning:
Adore Lord

Many are the hues, so is the Lord,
Many are the goodly deeds, so is the pleasure;
Many are the vile deeds, so are the iniquities
They see all these,
Yet they adore not the Lord.
Tamil Meaning:
சிவன் ஏனை யாவரினும் மேலானவன்; எந்த இடத்திலும் முகந்துகொள்ளக் கூடிய பேரானந்தப் பெருங்கடலாய் உள்ளவன்; முத்துப்போலும் வெண்மை நிறம் உடையவன். அப்பொழுதே நீலமணிபோலும் கருமை நிறத்தையும் உடையவன். அத்தகையோனைச் சித்தர்களும், தேவர்களும் எத்துணையோ காலமாக பொதுவாக எண்ணுகின்றார்கள். ஆயினும் இன்னும் உண்மையாக அறிந்திலர்.
Special Remark:
சிவபெருமான், ``பொங்கழல் உருவன்``1 ஆயினும் பளிங்குபோன்றவன் என்பதை, ``தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே``2 என்பதனான் அறிக. வெண்ணிறம் அப்பன், கருநிறம் அம்மை. `எவரும் தாம் தாம் இடத்தில் இருந்தே முகந்து கொள்ளக் கூடியகடல் எதுவும் இன்மையால் சிவன் அத்தகைய கடலாய் இருத்தலாலும், ஒருபாதி உடம்பு ஒரு நிறமும், மற்றொரு பாதி உடம்பு வேறொரு நிறமும் உள்ளார் எவரும் இன்மையால் சிவன் அத்தகைய உருவம் உடையவனாக இருத்தலாலும் இந்த அதிசயங்களைச் சித்தரும், அமரரும் எண்ணி வியக்கின்றார்களேயன்றி, `எவ்வாற்றால் இவன் இப்படியிருக்கின்றான்` அறிந்தாரில்லை` என்பதாம். ``ஓருடம் பிருவாரகி``3 என வேறிடத்தும் வியந்தோதுதல் காணத்தக்கது. ``ஈசன்`` எனப்பின் வருவதனை வைத்து, அவ்விடத்தில், `அவனை` எனச் சுட்டியுரைக்க.
இதனால், சிவனது, யாவராலும் அறுதியிட்டறியப்படாத அதிசயத் தன்மை புகழ்ந்து கூறப்பட்டது.