ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

English Meaning:
His Supreme Might

By His Might He supports the worlds seven,
By His Might He is subtler than atom,
By His Might He surpasses
The eight mountain ranges in directions eight,
By His Might, the oceans roar.
Tamil Meaning:
எங்கள் பெருமானாகிய சிவன், சார்ந்ததன் வண்ண மாவதும், ஒருகாலத்து ஒன்றனை மட்டுமே உணர்தலின் சிறிதாயும் உள்ள அறிவினையுடைய உயிர்களாயும் அவ்வுயிர்கட்கு நிலைக் களமாகிய உடல்களாயும் அவ்வுடல்களுக்கு இடமாகிய அண்டங் களாயும் உள்ளான். அவனை, உயிர்களின் அறிவுக்கறிவாகவும், உயிர்க்குணங்கலின் மாறுபட்ட குணங்களையுடையவனாகவும் உணரும் அறிவே நுண்ணறிவாகும்.
Special Remark:
``புணர்வது`` என்பது `அழுந்துவது` என்னும் பொருட்டு. `புணர்வதாயும், புல்லிதாயும் உள்ள உணர்வு` என்க. `எம்பெருமான்` என எடுத்துக்கொண்டு, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``உணர்வு, உடல்`` என்பவற்றிலும் உள்ள எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. ``எம்பெருமானை`` என்பதை `அவனை` என்றவாறாகக் கொள்க. முதற்கண் உள்ள, ``உணர்வது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. முதலடியில் உள்ள, ``ஆயும்`` என்றவற்றை, `ஆகவும்` எனத் திரிக்க. ஏகாரங்கள் அசை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.