ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

English Meaning:
Devotees More Rewarded Than Celestials

He came and stood before His devotees,
He the Rare Truth;
Even if the Celestials and their King Indra ask
What will they get, but the music of lovely damsels?
But that which devotees get is beyond all their heaven.
Tamil Meaning:
(`தோத்திரம்` என்னும் அதிகாரத்தை முதலில் `தோத்திரத்தின் சிறப்புணர்த்துவது` என்னும் பொருளதாக வைத்து, முன் மந்திரம் வரையில் அதனையே கூறிவந்த நாயனார் தோத்திரத்தைக் கூறுவது` என்னும் பொருளதாக வைத்து, இது முதலாக வரும் மந்திரங்களில் தோத்திரமே செய்கின்றார். `இவ்வாற்றால் பிறரும் தோத்திரம் செய்யப் பயன்படும்` என்பது பற்றி திருவள்ளுவ நாயனாரும், `பெரியாரைப் பிழையாமை` என்ற ஓர் அதிகாரத்தை இரண்டு பொருளதாக வைத்துக் கூறியதைக் காணலாம்.) இவ்வுலகில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற இன்ப ஆரவாரமே யல்லது பிறிதொரு சிறப்பும் இல்லாத விண்ணுலகச் சிற்றின்பத்தை, நூறு பரிமேதங்களை வேதம் நுவன்றவாற்றானே சிறிதும் குறையின்றி வருந்திச் செய்து இந்திர பதவி எய்துவோர் முதலாகப் பலர் மயக்கத்தால் விரும்பினாராயினும் தன் அடியவர்களால் மட்டுமே பெறப்படுகின்ற சிவன் தரும் இன்பமே அவ்விண்ணுலக இன்பங்கட் கெல்லாம் அப்பாற்பட்ட அரிய பெரிய இன்பமாகும்.
Special Remark:
``அந்தம்`` `வெளி` என்னும் பொருட்டாய், யாதும் இன்மையைக் குறித்தது. ``வானம்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்து விளையும் இன்பத்தைக் குறித்தது. இதனை முன்னர், வேண்டுதலுக்குச் செயப்படுபொருளாக்கிப் பின்னர், `அரும்பொருள் அதனின் அப்புறம் ஆம்` என இயைத்துரைக்க. எல்லாம், `பொருள்` எனப்படுதலின், இங்கு இன்பம் ``பொருள்`` எனப்பட்டது. `அடியார்கட்கு வந்து நின்றானது பொருள்` என இயைக்க. வந்து நிற்றல், கிடைத்தல்.
இதனால், சிவன் பிறவிடத்தில்லாத பேரின்பத்தைத் தருதல் எடுத்தோதிப் புகழப்பட்டது.
``செங்க ணவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா``1
என்ற திருவாசகத்தைக் காண்க.