ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

English Meaning:
Divine Knight-Errant That Severs Karmas

Like me my God stretched His Flower-Feet in Grace
They, who adore Him daily in goodness, flourish;
He is the Divine Knight;
He severs my evil stars and Karmas,
Into His Sword of Jnana, my thoughts centred;
And no more cares I possess.
Tamil Meaning:
[இங்கும் ``கடவுளை`` என வேறுபோலக் கூறப்பட்டதை, `கடவுளாகிய தன்னை` என ஒன்றுபடுத்தி உரைக்க.]
Special Remark:
நாளும் - நாள்தோறும். நன்மை - நன்றிச்செயல். ``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப் - பின்னை மறத்தல் பிழையலது``1 என்றார் மெய்கண்ட தேவர். `நின்றவரது, குரிசிலினது` என ஆறாவது விரிக்க. கோள் - கிரக சாரம். ``கோட்பாலனவும், வினையும் குறுகாமை``2 என்றார் ஞானசம்பந்தரும். குரிசில் - சிவபிரான். அவன் தந்த வாள், ஞானம். ``நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்``3 என முன்னருங் கூறினார் உம்மை, சிறப்பு `மனத்தொடு பொருந்த` என ஒருசொல் வருவிக்க.
இதனால், ஞானம் பெற்றபின்னும் தன்னை வழிபடுவாரைச் சிவன் கைவிடாது காக்கும் கருணை புகழ்ந்து கூறப்பட்டது. ``துறக்குமா சொலப்படாய், துருத்தியாய்``4 என்பதும் ஞானசம்பந்தர் வாக்கு.