ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

English Meaning:
He is Bounteous

Within heart is He,
Without, too, He says, ``I am;``
The inscrutable Lord;
Nandi of fragrant matted locks;
Those who adore Him constant
Their sea of birth He severs;
He, of Bounteous Magnificence.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமான், உலகர் எத்தனை கூறினாலும், அவனை உணர்ந்தோர். ``என் புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ``1 எனவும், ``ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி``2 எனவும் உறுதிப்பட உரைத்தலால், இல்லாதவனும் அல்லன். அவர் எத்தனை சொல்லினும் உலகர், ``காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு``3 என்றபடி. தாம் கூறுவதையே கூறி, `சிவன் இல்லை` எனப் பிணங்குதலின், உள்ளவனும் அல்லன். `இல்லை` என்பவரது கல் போன்ற நெஞ்சங்களிலும் ஒரு காலத்தில் அந்நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றுவான்; ஏனெனில், அவன் பழமையாகவே எங்கும் இருப்பவன்; இயல்பிலே மாசற்றவன் ஆதலின் மாசிலாமணிபோல ஒளிவிடுந் தன்மையன்; தோன்றியபின் தோன்றிய இடத்தினின்றும் பெயர்தல் இல்லாதவன்; சொல்லைக் கடந்த அறிவு வடிவினன். என்றாலும் அனைத்துயிர்களையும் தொடர்ந்து நிற்கின்றான்.
Special Remark:
``உண்மையுமாய், இன்மையுமாய்``4 என்னும் திருவாசகத்தையும் காண்க. ``உளதன் றிலதன்று``5 எனப் பிற்காலத்தவரும் கூறினார். ``தூய்மணி`` என்பதை, ``தூயவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தூயன் ஆகலின் தூய்மணிபோல்பவன்` என ஒரு சொல் வருவித்துரைக்க.
இதனால், சிவனது பெருமைகளே புகழ்ந்து கூறப்பட்டன.